Author: Editor web3
அமெரிக்காவுடனான தற்போதைய வரிக் கட்டணப் பிரச்சினைக்கு மத்தியில், மூத்த பாஜக தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வர்த்தகம் மற்றும் வரிக் கட்டணங்கள் தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதட்டங்கள் நிலவுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை மேலும் அதிகரிப் போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மிரட்டல் விடுத்தார். அப்போது பேசிய டிரம்ப், “பிரதமர் மோடி மிகவும் நல்லவர். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புகிறார். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும், இந்தியா என்னை மகிழ்ச்சியடைய செய்வது முக்கியம்” என தெரிவித்தார். இந்தநிலையில், டிரம்பின் ஆதரவாளரான பிரதமர் மோடி ஓய்வு பெறவேண்டும் என்று…
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன் ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது என்று கூறிய நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும். த்திய தொல்லியல் துறையின் அனுமதியுடன் மலை உச்சியில் உள்ள தூணில் கோவில் நிர்வாகமே விளக்கு ஏற்ற வேண்டும். ஒவ்வொரு கார்த்திகையின்போதும் தீபம் ஏற்ற வேண்டும். தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும். தீபமேற்றும்போது யாரை அனுமதிக்கலாம் என காவல் துறை, தொல்லியல் துறை, தேவஸ்தானம் முடிவு செய்யலாம். மலை…
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு அதனை பராமரிக்க மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, அதன்படி, எனக்கு ரூ. 48,000 கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். திருச்சி மன்னார்புரத்தில் பாஜக சார்பில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நிகழ்ச்சி பேசிய அவர், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு அதனை பராமரிக்க மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இது அரசியல் மேடை இல்லை. இருந்தும் நான் சொல்கிறேன். ஒரு காளை வளர்ப்பவர்களுக்கு தான், அந்த காளையை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். திமுக தமது தேர்தல் வாக்குறுதியில் 2021ல் சொல்லி இருந்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொல்லி இருந்தார்கள். நியாயப்படி, திமுக இன்றைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால், மாதம் ரூ. ஆயிரம் என கணக்கு போட்டால், எனக்கே 48 ஆயிரம் ரூபாய் கொடுக்க…
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே ஆளுநர் ரவியை காலை 11 மணி அளவில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்திருந்தார். அப்போது அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.பி. வேலுமணி அவரை இரண்டு முறை தனியாக சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், ஆளுநர் ரவியை காலை 11 மணி அளவில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளார். சந்திப்பின்போது, அமைச்சர்கள் தொடர்புடைய முறைகேடுகளுக்கான ஆதாரங்களை ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யாதது குறித்தும், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான மணல் கொள்ளை வழக்கில் ரூ.3,000 கோடி முறைகேடு தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளிக்க உள்ளார். மேலும், தமிழக சட்டசபை வரும்…
வங்கதேசத்தின் நர்சிங்டி மாவட்டத்தில் மீண்டும் ஒரு இந்து நபர் கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் 40 வயது இந்து ஒருவர் கொல்லப்பட்டுள்ளார், இது கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் நடந்த இரண்டாவது சம்பவமாகும். மளிகைக் கடை உரிமையாளரான சரத் மணி சக்ரவர்த்தி, திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் நர்சிங்டி மாவட்டத்தில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. படுகாயங்களுடன் போராடிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். கடந்த 18 நாட்களில் 6 இந்துக்கள் இப்படி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவர் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஜஷோர் மாவட்டத்தில் 45 வயது தொழிற்சாலை உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு செய்தித்தாளின் தற்காலிக ஆசிரியராகவும் இருந்த ராணா பிரதாப்பை ஒரு கும்பல் தலையில் சுட்டுக் கொன்றது, அவர்கள் அவரது கழுத்தையும் அறுத்தனர். கேஷப்பூர் துணை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரின் மகனான பிரதாப், இரண்டு வருடங்களாக…
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் 8ம் தேதி ஆலந்தூர் நசரத்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் நலத் திட்ட உதவிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும், இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுவதுடன், இதற்கு ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனுடன் கூடுதலாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6,936 கோடியே…
வெனிசுலாவின் முன்னாள் அதிபர் மதுரோ, பூமியின் நரகம் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் Brooklyn சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்க படைகள் சனிக்கிழமை அதிகாலை பெரும் வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்தத் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தன. அதிபர் மதுரோவும், அவரது மனைவியும் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வெளியிட வேண்டும் என்று துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வலியுறுத்திய நிலையில், அமெரிக்க ராணுவத்தின் பிடியில் அதிபர் மதுரோ இருப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது. அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், நியூயார்க்கில் உள்ள ஸ்டீவர்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் விமானம் தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து, இவர்கள் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிபர் மதுரோவும், அவரது…
2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி ஆளுநர் உரையுடன் நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜன. 6ஆம் தேதி) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது குறிப்பாக, ஆளுநர் உரை, பட்ஜெட் கூட்டத்தொடர், ஓய்வூதியம் உள்ளிட்டவைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். அவரது உரையில் இடம் பெற வேண்டியவை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிவித்துள்ள நிலையில் அதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. அதேபோல்,…
விஜய்யின் ஜனநாயகன் பட டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் தொடங்கியுள்ளது. அரசியலில் குதித்துள்ள தவெக தலைவர் விஜய்யின் கடைசி படமாக , ஜனநாயகன் வெளியாக இருக்கிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகிய மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. வரும் ஜனவரி 9ஆம் தேதி இப்படம் ரிலீஸாக இருக்கும் நிலையில், வெளிநாடுகளில் தொடங்கிய புக்கிங், தமிழகத்தில் எப்போது தொடங்கும் என்பது குறித்த குழப்பங்கள் நிலவின. பிற மாநிலங்களிலும் கூட டிக்கெட் புக்கிங் ஆரம்பித்துவிட்டது. அங்குள்ள ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்காக ஆர்வமுடன் காத்துக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 4ஆம் தேதி, டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்தநிலையில், பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஜனநாயகன் பட டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் தொடங்கியுள்ளது. சென்சார் சான்றிதழ்…
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.6) பவுனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.1,02,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே, தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அன்றாடம் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன. 1) தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,02,640 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,760க்கும், ஒரு சவரன் ரூ.1,02,080க்கும் விற்பனை…