Author: Editor web3

பீகாரில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. அங்கு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அங்கே பீகார் வெற்றிபெற காரணம் முறையாக கூட்டணி அமைத்தது. எலியும் பூனையுமாக இருந்த சிராஜ் பாஸ்வான் – நிதிஷ் குடும்பத்தை சேர்க்க காரணமாக இருந்தது பாஜக வியூகம்தான். அதேபோல் நிதிஷ் – பாஜக இடையே இருந்த கருத்து வேறுபாட்டை போக்கவும் காரணமாக இருந்தது பாஜகவின் திட்டம். இதே திட்டத்தை தமிழ்நாட்டில் பாண்டா களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக இடையே சில கருத்து வேறுபாடு உள்ளது. அதேபோல் அதிமுக உள்ளேயே உட்கட்சி மோதல் உள்ளது. செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக திரும்பி விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டார்.  அதேபோல் ஓ பன்னீர்செல்வம், டிடிவி…

Read More

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சுரேஷ் கல்மாடி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81. புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 3.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. சுரேஷ் கல்மாடி, மத்திய ரயில்வே துறை இணை அமைச்சராகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) முன்னாள் தலைவராகவும் பணியாற்றினார். புனேவின் முக்கிய அரசியல் பிரமுகரான திரு. கல்மாடி, பலமுறை மக்களவையில் அந்த நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்த அவர், பல ஆண்டுகளாக தேசிய அளவில் விளையாட்டு நிர்வாகத்துடனும் தொடர்புடையவராக இருந்தார். கட்சி பாகுபாடின்றி அனைத்துத் தலைவர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர் மற்றும் பொது வாழ்வில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு அஞ்சலி செலுத்தினர். அவரது பூதவுடல் புனேவின் எரண்ட்வானே பகுதியில் உள்ள கல்மடி இல்லத்தில் மதியம் 2…

Read More

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட யூத் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி யு19 அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் ஒருநாள் போட்டி மழை, தொடர முடியாத நிலைமை ஏற்பட்டது. இறுதியில், டிஎல்எஸ் முறைப்படி போட்டியின் முடிவை நடுவர் அறிவித்தார். அப்போது, இந்திய யு19 அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், 2வது ஒருநாள் போட்டி பெனோனியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 49.3 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனிடையே மின்னல் தாக்கி இடையூறு ஏற்பட்டதால், இந்தியா 174 ரன்களை 27 ஓவர்களில் துரத்த வேண்டும் என்று இலக்கு மாற்றப்பட்டது. அதன்படி, சூர்யவஷியின் அதிரடி அரை சதத்தால், இந்திய அணி 23.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட…

Read More

சென்னை ராயபுரத்தில் 74 படுக்கைகளுடன் 1880 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசு ராஜா சர் ராமசாமி முதலியார் (ஆர்எஸ்ஆர்எம்) மருத்துவமனை வறுமை நிலையிலுள்ள தாய்மார்களுக்கு சேவை செய்வதில் முதன்மையாக உள்ளது. வடசென்னையிலுள்ள பெரும்பாலான மக்களும் மேலும் அருகிலுள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் போன்ற பகுதிகளிலுள்ள மக்களும் சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களும் இந்த மருத்துவமனையின் சேவைகளால் பயனடைகின்றனர். குடும்ப நல மருத்துவ சிகிச்சைகள், குடும்பக் கட்டுப்பாடு, மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் நடைமுறைகள் உள்ளிட்ட முழு அளவிலான சேவைகளை இம்மருத்துவமனை பொதுமக்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது. இதுதவிர இம்மருத்துவமனையில் ஆண்டுதோறும் சுமார் 12,000 மகப்பேறுகள் நடைபெறுவதன் மூலம் அதிக மக்கள் நெருக்கம் கொண்ட வட சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை செய்து வருகிறது. இம்மருத்துவமனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் செயல் திறனை அதிகரிப்பதற்காக, தமிழ்நாடு அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையின் கட்டட சீரமைப்பு, மின்சார கருவிகள் மற்றும்…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த குடும்பங்களில் எத்தனை சதவீதம் நலத்திட்டங்கள் மற்றும் அரசு உதவிகளை பெறுகின்றன என்பதை காட்டும் ஒரு புள்ளிவிவர அட்டவணையை பகிர்ந்தார். இந்த தகவல்கள் அவரது சமூக ஊடகத் தளமான Truth Social-இல் வெளியிடப்பட்டன. அந்த பட்டியலில் சுமார் 120 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தாலும், இந்தியாவின் பெயர் எங்கும் இடம்பெறவில்லை. இது குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், பூடான், சீனா மற்றும் நேபாளம் ஆகியவை அந்த அட்டவணையில் தெளிவாக சேர்க்கப்பட்டிருந்ததால், இந்தியா இடம்பெறாதது மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பிறந்த நாட்டின் அடிப்படையில் குடியேறிகளின் நலத்திட்டப் பயனாளி விகிதங்கள்’ என்ற தலைப்பிடப்பட்ட அந்த விளக்கப்படம், அமெரிக்கா வெனிசுலாவைத் தாக்கி, அதிபர் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. இருப்பினும், எந்த வகையான நலத்திட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது…

Read More

விஜய் ஹசாரே டிராபியில் வேகமாக 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார். உள்நாட்டுப் போட்டியான விஜய் ஹசாரே கோப்பையில் 100 சிக்ஸர்களை அடித்த அதிவேக பேட்ஸ்மேன் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார். இந்தத் தொடரின் நடப்பு சீசனில் கெய்க்வாட் மகாராஷ்டிரா அணிக்குத் தலைமை தாங்குகிறார். விஜய் ஹசாரே கோப்பை என்பது இந்தியாவின் முதன்மையான 50 ஓவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டியாகும். ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு சீசனின் ஐந்தாவது சுற்றில், எலைட் குரூப் சி பிரிவில் மும்பைக்கு எதிராக மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்த கெய்க்வாட், 52 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அப்போது அவர் ஏழு பவுண்டரிகளை அடித்தார். 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களின் உதவியுடன் 114 பந்துகளில் 114 ரன்கள் எடுத்த அர்ஷின் குல்கர்னியுடன் இணைந்து, கெய்க்வாட் இரண்டாவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப்…

Read More

முன்னெப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கையாக, வங்கதேச அரசு உடனடியாக நாடு முழுவதும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஒளிபரப்பைத் தடை செய்துள்ளது. இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்க்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில்,  வங்கதேச அரசாங்கம் ஒரு கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கம், நாட்டில் அனைத்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளின் ஒளிபரப்பிற்கும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை விதித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் (பிசிசிஐ) பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கும் இடையிலான ஒரு சர்ச்சையைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், இந்தியா-பங்களாதேஷ் கிரிக்கெட் உறவுகளின் எதிர்காலம் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது. வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்டதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன், முஸ்தாஃபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு பிசிசிஐ உத்தரவிட்டது. அவர் கேகேஆர் அணிக்கு ஒரு…

Read More

சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீசை எதிர்த்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் காலக்கட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை, அமைச்சர் பெரியசாமி, அவரது மகனும், பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார், மகள் இந்திரா உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அமைச்சர், எம்.எல்.ஏ. அலுவலகங்களில் கடந்த 2025 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள், செல்போன், நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவற்றை அமலாக்கத் துறையினர் கைப்பற்றினர்.…

Read More

இந்தியப் பெண்ணான நிகிதா கோடிஷாலா அமெரிக்காவில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒரு முக்கியப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காதலனை இன்டர்போல் கைது செய்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவி நிகிதா ராவ் கோடிஷா, மேரிலாந்தில் கத்திக்குத்து காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், நிகிதாவின் உடல், அவரது முன்னாள் காதலரான அர்ஜுன் சர்மாவின் குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. நிகிதாவின் முன்னாள் காதலன் அர்ஜுனை, இன்டர்போல் காவல்துறையினர் திங்கட்கிழமை (ஜனவரி 5) தமிழ்நாட்டில் கைது செய்தனர். கொலைக்குப் பிறகு அர்ஜுன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக அமெரிக்கக் காவல்துறை தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டன. இந்தியா டுடேவில் வெளியான ஒரு அறிக்கையின்படி,  26 வயதான அர்ஜுன், அமெரிக்க மாநிலமான மேரிலாந்து நகரத்தில் உள்ள உள்ளூர் காவல்துறையிடம் ஒரு புகாரை அளித்தார்,  அதில், தனது…

Read More

காரைக்குடி, வேளச்சேரி, சிவகாசி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட 12 தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது அதிருப்தி நிலவுவதாகவும், அந்த தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் நாளுக்கு நாள் அனல் பறக்கின்றன. இப்படியிருக்கையில் திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்த வதந்திகள் பூகம்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன. விஜய்யுடன் கூட்டணி வைப்பதில் தமிழக காங்கிரஸில் ஒரு தரப்பு ஆர்வம் காட்டினாலும், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். ஒருவேளை அகில இந்திய காங்கிரஸ் தலைமை விஜய்யுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தால், ப. சிதம்பரம் தனது பழைய ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ போல் ஒரு புதிய கட்சியைத் தொடங்குவார் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரங்களில் பலமாக அடிபடுகின்றன. காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது நிலவும் உட்கட்சி மோதல்கள் மற்றும்…

Read More