Author: Editor web3
வெனிசுலாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின்போது 32 கியூப இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கியூப அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4, 2026) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெனிசுலாவில் அமெரிக்கத் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து கியூபாவால் வெளியிடப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும். கொல்லப்பட்ட அனைத்து கியூப இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகளும் வெனிசுலா அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் அங்கு பணியமர்த்தப்பட்டு, ஒரு சிறப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று கியூப அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது. இருப்பினும், அந்த அதிகாரிகள் வெனிசுலாவில் என்ன பணிகளைச் செய்து கொண்டிருந்தார்கள் என்பதை கியூப அரசாங்கம் குறிப்பிடவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்த நடவடிக்கை குறித்துக் குறிப்பிட்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜனவரி 4) புளோரிடாவிலிருந்து வாஷிங்டனுக்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “உங்களுக்குத் தெரியும், நேற்று நிறைய கியூபர்கள் இறந்தனர். எதிர்த் தரப்பில் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டன.…
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. வரும் 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேமுதிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்த முக்கிய முடிவை அறிவிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்ற தேர்தலில் என்ன முடிவு எடுக்க போகிறோம் என்பதை மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசித்துளோம். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் வரக்கூடிய தேர்தலில் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என கருத்துக்களை தெரிவிக்கலாம். தேமுதிக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டணி குறித்து உங்களுடைய கருத்தை இங்குள்ள கருத்து பெட்டியில் தெரிவிக்கலாம்.…
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கனிமொழி, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்தநிலையில், கனிமொழிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். https://x.com/mkstalin/status/2008049956175970627?s=46 அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி – என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! என பதிவிட்டு புகழாரம் சூட்டியுள்ளார். இதேபோல், தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2 நாட்கள் பயணமாக திருச்சிக்கு வந்துள்ள அமித்ஷா கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல. நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல’ என எம்.ஜி.ஆர் பாடிய பாடல் அப்படியே எடப்பாடி பழனிசாமிக்கு பொருந்தும்! சேலத்து மேடையில் அரசியல் நடிப்பை அரங்கேற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ’’திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி’’ எனச் சொல்லும் பழனிசாமியின் அதிமுக, அடிமை கம்பெனியாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. 2016-ஆம் ஆண்டிலிருந்து 2024-ஆம் வரை தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற பழனிசாமி ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது’ என்று சொல்வதைக் கேட்டு சின்னக் குழந்தையும் கெக்க பெக்க என சிரிக்கும். ’’2021-ல் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 இடங்களில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இது அதிமுகவின் கோட்டை’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில்…
தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்களையும் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவை திரட்ட வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு அமித் ஷா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அமித்ஷா நேற்று நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பின்பு, மாநில நிர்வாகிகளுடன் மையக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், முரளிதர் மோகல், அர்ஜுன் ராம் மெகவால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பேசிய அமித்ஷா, தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்களையும் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவை திரட்ட வேண்டும். பல சமுதாயங்களுக்கு பாஜக செய்துள்ள திட்டங்கள் கவுரவங்கள் தொடர்பாக எடுத்துரைத்து அவர்களை கூட்டணிக்கு ஆதரவு தர…
20 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 20 லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது என்றும் முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்தமாணவர்களுக்கும் மணிக்கணினி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல், ஏசர், எச்பி ஆகிய நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. intel i3, 8 BG RAM 256 GB SSD…
சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. (ஜன.4) தங்கம் விலை ரூ.1,00,800க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.12,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ. 12,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ.265க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.8000 உயர்ந்து ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் நேற்று, ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு ரூ.257க்கும், கிலோ வெள்ளி ரூ. 2,57,000 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய சீமான், எந்த பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக்கூடாது என பாஜக நினைப்பதாக விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவின் மோடி பொங்கல் என்று கூறினால், ஓடிப்போங்கள் என்று பதிலுக்கு கூற வேண்டியதுதான் என்று கிண்டலடித்துள்ளார். மேலும், தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய சீமான், எந்த பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக்கூடாது என பாஜக நினைப்பதாக விமர்சித்துள்ளார். திமுக அரசுக்கு நிதி மேலாண்மை இல்லை; ஏற்கெனவே ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்யவே அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் கடன் சுமையை அதிகரிக்கும். ஜாக்டோ-ஜியோவிடம் பல லட்சம் வாக்குகள் இருப்பதால் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.…
சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் No Commodity Card (NC) அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்காது என்றும் மற்ற அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் என்ற மகிழ்ச்சிச் செய்தியை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ. 3000 ரொக்கமும் சேர்த்து அளிக்கப்படும் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். மேலும் அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் கிடையாது: இந்தாண்டு பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 மற்றும் பொருள்களின் தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தான் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சர்க்கரை ரேஷன் அட்டை (Sugar Cards) வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொருட்கள் கிடைக்காது. மேலும் கௌரவ ரேஷன் அட்டைதாரர்கள் எனப்படும்…
தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பள்ளிகள் திறந்தாலும் சம வேலைக்கு சம ஊதியத்திற்கான போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2006 ஜூன் மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,370 ரூபாய் அடிப்படை ஊதியமும், அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ.5,200 என்ற அடிப்படை ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வேறுபாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், 311 வது தேர்தல் வாக்குறுதியாக, ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல்,…