Author: Editor web3
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் விஜய்யின் தவெக கூட்டணியின் இடம்பெறுவார்கள் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், களத்தில்தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் உண்மையான நிலை தெரியும். மக்கள் அளிக்கும் வரவேற்பை பார்க்கும்போது தவெக முதலிடம் பிடிக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக கூறினார். அதிமுக, திமுகவை தவிர்த்து ஒரு புதிய கட்சி தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு வந்துவிட்டதாக கூறிய அவர், ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்புகள் தேர்தல் நேரத்தில் வெளியிடப்படுவதாகவும், அது மக்கள் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக இருக்கிறது என்று விமர்சித்தார். மேலும், உலகளவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் குறித்த ஆய்வுகளில் விஜய் முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிட்ட செங்கோட்டையன், அடுத்த முதல்வர் விஜய்தான் என்று மக்கள் கருதுவதாக தெரிவித்தார். பொங்கல் வரை பொறுத்திருந்து பாருங்கள், தவெகவில் எத்தனை பேர் இணைவார்கள் என்பதை நீங்கள் நேரில் பார்ப்பீர்கள், நல்லவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே…
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் ஜனவரி 9ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. அந்தவகையில், திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலும், விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, இந்தநிலையில் அதிமுக ஜன.9ம் தேதி வேட்பாளர் நேர்காணலை தொடங்கவுள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் 13ம் தேதி வரை நேர்காணல் நடக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப…
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ந்தேதி கடைசி நாள். இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து இருந்தார். அதன்படி, இந்த சிறப்பு முகாம் முதற்கட்டமாக கடந்த டிச.27,28 தேதிகளில் சனி, மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வரைவு வாக்காளர்…
அதிபர் மதுரோ அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டதை அடுத்து, வெனிசுலாவின் இடைக்கால அதிபராக துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை நியமித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெனிசுலா மீதான தாக்குதலையடுத்து, அதிபர் மதுரோ அமெரிக்க படைகளால் நேற்று சிறைபிடிக்கப்பட்டு நியூயார்க் நகருக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து, முறையான ஆட்சி மாற்றம் வரும்வரை வெனிசுலாவை அமெரிக்காவே தற்காலிகமாக நிர்வகிக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை, இடைக்கால அதிபராக நியமித்து, அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாட்டின் நிர்வாகத்தை தொடரவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. டெல்சி ரோட்ரிக்ஸ் யார்? மே 18, 1969 அன்று கராகஸில் பிறந்த டெல்சி ரோட்ரிக்ஸ் , 56 வயதான இவர், தீவிர அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் 1970களில் லிகா சோசலிஸ்டா கட்சியை நிறுவிய இடதுசாரி கெரில்லா தலைவரான ஜார்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்ஸின் மகள். அவரது சகோதரர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் தற்போது…
பொங்கல் பரிசுத் தொகை தொடர்பான அறிவிப்பை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, ஆகியவற்றை ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. அதாவது, கடந்த 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவும், அடுத்தடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பச்சரி மற்றும் கரும்பு உள்ளிட்ட தொகுப்புடன், ரூ.1000 ரொக்கமும் வழங்கினர். ஆனால், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகுப்பில் ரொக்கம் இடம்பெறாதது ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் தான் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முறை நிச்சயம் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கமும் இடம்பெறும் என்றும், ரூ.5000 வரை வழங்கப்படலாம் என்றும் எதிர்க்கட்சிகள் யூகிக்க, பொதுமக்களும் எதிர்பார்த்தனர்.…
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. அமெரிக்காவுக்குள் ஃபெண்டானில் என்னும் போதைப் பொருள் ஊடுருவ நிகோலஸ் மதுரோவே காரணம் என டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார். மேலும் வெனிசுலாவுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளார். அதே நேரம் டிரம்பின் குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்த சூழலில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதன்பின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் இத்தகவலை வெளியிட்டார். அதில், “மதுரோ மற்றும் அவரது மனைவி பிடிபட்டனர். அவர்கள்…
திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான எல்.கணேசன் வயது மூப்பு காரணமாக தஞ்சாவூரில் காலமானார். அவருக்கு வயது 92. மொழிப்போர் தளபதி என அழைக்கப்படும் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எல்.கணேசன், 2 முறை ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ., எம்.எல்.சி., மாநிலங்களவை எம்.பி. பதவிகளை வகித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் 24-04-1934ல் பிறந்தார். 1971, 1989 ஆகிய இருமுறை ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, 1989ல் முதல்வரின் பேரவை செயலாளராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க.வின் சார்பில் 1980 சூன் 30ஆம் நாள் முதல் 1986 ஏப்ரல் 10ஆம் நாள் வரை பணியாற்றினார்., ஒருமுறை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளகர்த்தர்களில் முதன்மையானவர்.1971ல் திமுகவின் மாநில மாணவரணி செயலாளராக பணியாற்றியுள்ளார். 1993ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்உருவானபோது இவர்…
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் பரோடா அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா, விதர்பா அணிக்கு எதிராக ஒரு சிறப்பான சதத்தை அடித்தார். இது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஹர்திக்கின் முதல் சதமாகும். அவர் 62 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 39வது ஓவரில் அதிரடியாக விளையாடி தனது சதத்தை எட்டினார். அந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களை அடித்த அவர், கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார். https://x.com/BCCIdomestic/status/2007361735918006739? தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியின் ஐந்தாவது சுற்று இன்று நடைபெற்றது. விதர்பா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. பரோடா அணிக்குச் சிறப்பான தொடக்கம் அமையவில்லை. 71 ரன்களுக்குள் பாதி அணி ஆட்டமிழந்தது. ஏழாவது வீரராகக் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, ஆரம்பத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப நிதானமாக விளையாடினார். அவர் தனது சகோதரரும் அணியின் கேப்டனுமான…
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( BCCI), IPL அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( KKR) அணிக்கு, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது . வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை 2026 ஐபிஎல் ஏலத்தில் ₹9.20 கோடிக்கு கேகேஆர் அணி வாங்கியது.வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான சமீபத்திய வன்முறையைத் தொடர்ந்து, கேகேஆர் மற்றும் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன . பிசிசிஐயும் விமர்சிக்கப்பட்டது. பல முக்கிய அரசியல்வாதிகள் ஐபிஎல்லில் வங்கதேச வீரர் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பினர். சர்ச்சை அதிகரித்ததைக் கண்ட பிசிசிஐ தலையிட்டு, முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்க உத்தரவிட்டது. பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா இந்த தகவலை உறுதிப்படுத்தினார். தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் வாரியம் தனது முடிவை கேகேஆர் அணிக்குத் தெரிவித்ததாக அவர் கூறினார். “முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. தேவைப்பட்டால் அவர்கள் மாற்று வீரரைக் கோரலாம், கோரிக்கையின் பேரில், பிசிசிஐ…
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் 14 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். பிஜாப்பூர் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்த உளவுத் தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அதன்படி இன்று அதிகாலை 5 மணி முதல் மாவட்ட ரிசர்வ் குழுவினருக்கும் (டிஆர்ஜி) மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடநது வருகிறது . இந்த மோதல் நடந்த இடத்திலிருந்து இரண்டு மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் கோண்டா பகுதி குழுச் செயலாளர் சச்சின் மங்காடும் ஒருவர் ஆவார். மோதல் நடந்த இடத்திலிருந்து ஏகே-47 மற்றும் இன்சாஸ் துப்பாக்கிகள் உட்பட தானியங்கி ஆயுதங்கள் மீட்கப்பட்டன. கொல்லப்பட்ட மற்ற நக்சலைட்டுகளின் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. பஸ்தர் சரக ஐ.ஜி. பி. சுந்தர்ராஜ் அளித்த தகவலின்படி, தேடுதல் நடவடிக்கையின் போது இதுவரை மோதல் நடந்த இடத்திலிருந்து 2 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பஸ்தர் சரகத்தில் நக்சல் எதிர்ப்பு…