Author: Editor web3

ராணி வீரமங்கை வேலு நாச்சியார் ஜனவரி 3, 1730 அன்று பிறந்தார். அவர் இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி மற்றும் சக்கந்தி முத்தாளின் ஒரே மகளாக இருந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னணி பெண் வீராங்கனைகளில் ஒருவராக இவர் புகழ்பெற்றார். அரச குடும்பத்தில் பிறந்ததால் கல்வி, சமூக பணிகள் மற்றும் அரசியல் அறிவில் சிறந்த பயிற்சி பெற்றவர். அதன்படி, வீரமங்கை வேலுநாச்சியாரின் 296வது பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த வேலுநாச்சியாரின் தியாகமும் தொலைநோக்கு தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என்று கூறியுள்ளார். https://x.com/narendramodi/status/2007279340686565551? மேலும், காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என்று தெரிவித்து…

Read More

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று (ஜனவரி 3)   முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த 22ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நேற்று காலை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 22 ஆண்டுகளுக்கும் மேலாக…

Read More

சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போாராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்றும் 8-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த தேர்லில் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இந்தநிலையில், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே போராடி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என்றும் அவர்களை கைவிட மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசு ஒரு கட்டத்தில் நிற்பதாக கூறிய அவர், போராட்டம் நடத்துபவர்கள் மற்றொரு கட்டத்தில் இருப்பதாகவும் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Read More

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர் 9 பேரை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த அராஜக போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் முடிவு கிட்டியதாய் இல்லை. இந்த நிலையில், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மீண்டும் தமிழக (மயிலாடுதுறை) மீனவர்கள் 9 பேரை  கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, தமிழக மீனவர்களை  காங்கேசன் துறைமுக முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Read More

தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.1,00,160 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.12,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 2)  ஒரு கிராம் தங்கம் ரூ. 12,580க்கும், ஒரு சவரன் ரூ.1,00,640 க்கும் விற்பனை ஆனது. இந்தநிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று இறங்கியதே இதற்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.256-ஆகவும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.2,56,000-ஆகவும் விற்பனை. தொழில்துறை தேவை சற்று குறைந்ததால் வெள்ளி விலை இறங்கியுள்ளது. ஆய்வகங்கள், தொழில் வட்டாரங்கள், வெள்ளிப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் இந்த குறைவால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். Share.FacebookTwitterWhatsAppTelegramLinkedIn

Read More

கர்நாடகா பெல்லாரியில் நாளை (ஜனவரி 3ஆம் தேதி) நடைபெறவிருந்த வால்மீகி சிலை திறப்பு விழாவை முன்னிட்டு பேனர் வைப்பதில் பாஜக – காங்கிரஸ் இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதால் பதற்றம் நிலவிவருகிறது. கர்நாடகாவின் பெல்லாரியில், ஒரு பதாகை வைப்பது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ ஜனார்த்தன ரெட்டி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத் ரெட்டி ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. விவகாரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காங்கிரஸ் தொண்டர் உயிரிழந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ. ஜனார்த்தன ரெட்டி உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை கூற்றுப்படி, வியாழக்கிழமை (ஜனவரி 1, 2026) நடந்த இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது, “நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. எந்தவித விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன,” என்று…

Read More

இன்று, வளர்ந்து வரும் பொருளாதாரமாக அறியப்படும் இந்தியா, 2047-ஆம் ஆண்டிற்குள் பொருளாதார வல்லமைக்கு ஒரு புதிய உதாரணமாகத் திகழத் தயாராகி வருகிறது. உண்மையில், இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. சந்தைகளைத் திறந்துவிட்ட, வர்த்தகத்தை ஊக்குவித்த மற்றும் தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்திய பொருளாதார முடிவுகளால் இந்த வெற்றி சாத்தியமானது. இருப்பினும், வரும் ஆண்டுகளில் நாட்டின் வருமானம், மக்களின் வருமானம் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும். 2047-ஆம் ஆண்டில் இந்தியாவின் தலா வருமானம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி ஆராய்வோம். 2047-ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் எவ்வளவு இருக்கும்? அடுத்த இரண்டு தசாப்தங்களில் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 6 சதவீத விகிதத்தில் வளர்ந்தால், 2047-48 நிதியாண்டில் நாட்டின் தனிநபர் வருமானம் தோராயமாக 15,000 டாலர்களை எட்டக்கூடும். இந்திய ரூபாயில், இந்தத் தொகை ஆண்டுக்கு சுமார் 1.3 முதல் 1.5 மில்லியன் ரூபாய்க்குச் சமமாகும். தற்போது, ​​தனிநபர் வருமானம் சுமார் 2.5…

Read More

பழைய ஓய்வூதியம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை புதிய அறிவிப்பை வெளியியிடுகிறார் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளனர். தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பழைய ஓய்​வூ​தியத் திட்​டத்தை அமல்​படுத்​து​வது, அரசு துறை​களில் காலி​யாக உள்ள பணி​இடங்களை நிரப்​புவது, ஊதி​யக்​குழு முரண்​பாடு​களை களைவது உள்​ளிட்ட 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக ஜனவரி 6 ஆம் தேதி முதல் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​படப்​போவ​தாக அறிவித்து இருந்தனர். இதனிடையே, கடந்த 22 ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து…

Read More

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10 ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து, செம்மொழி என்ற பெயரில் கதையாக எழுதி, 2010 ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அந்த கதையை பயன்படுத்தி பராசக்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின்…

Read More

திருச்சியில் நடைபெறும் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். திருச்சி தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை திடலில் நடைபயணத்தை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து இந்த விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், “2026 தேர்தல் சனாதனத்திற்கும் சமத்துவத்திற்கும் இடையேயானது. சனாதனவாதிகள் ஒரு புறம் இருக்க திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் பேசுவது போல் முகமூடி அணிந்து சிலர் உள்ளனர். சனாதன சக்திகள் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கவிடாமல் இருக்கவே இந்த கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. திராவிடம் தமிழுக்கோ, தமிழர்களுக்கோ, தமிழ் தேசியத்திற்கோ எதிரானது அல்ல. திராவிடத்தால்தான் தமிழ் உயிர்ப்போடு இருக்கிறது. வைகோவின் சமத்துவ நடைபயணத்தை, திராவிட நடைபயணம் என்றும் சொல்லலாம். திராவிடம் என்பது தமிழ் தேசியம், சமூக நீதி, சமத்துவம்தான். பெரியார், அண்ணா, கலைஞர் போராடாமல் இருந்திருந்தால் நாம் இன்று இந்திவாலாக்களாகி இருப்போம் என்று…

Read More