Author: Editor web3
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். உலக பணக்கார கடவுள் என அழைக்கப்படும் ஏழுமலையான் உலக பிரசித்தி பெற்றது. வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஏழுமலையானை கால் கடுக்க நின்று தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் உள்ளிட்டவற்றின் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வைகுண்ட ஏகாதசி நாளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக சொர்க்க வாசல் திறப்பு நடைபெறக் கூடும். சொர்க்க வாசல் நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். வைகுண்ட ஏகாதசி நாளில் உத்தார துவாரம் எனும் சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஏழுமலையானை தரிசிப்பதால் புண்ணியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதனால், அந்த நாளில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர்.…
2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக, சில மாதங்களாகவே தமிழக காங்கிரஸுக்குள் இரு தரப்பு குரல்கள் ஒலித்துவருவதை அறிவோம். பத்தாண்டுகளாக வெற்றி கூட்டாளியாக திகழும் திமுகவுடனேயே கூட்டணியைத் தொடரலாம் என்று ஒரு தரப்பு பேச, விஜய் தொடங்கியிருக்கும் தவெகவுடன் செல்லலாம் என்று இன்னோர் தரப்பு பேசிவருவகிறது. இதுதொடர்பாக பொதுவெளியில் சமீப காலமாக தங்கள் குரலை உயர்த்த ஆரம்பித்திருக்கின்றனர் காங்கிரஸ் வட்டாரங்கள். அதோடு, ‘ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும்’ என விஜய் காட்டிய ஆசை, தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளையும், அக்கட்சி மேலிடத்தையும் ஆட்டி படைக்கிறது. அதனால், த.வெ.க., தலைவர் விஜயை ரகசியமாக சந்தித்து பேசுவதும், தி.மு.க., அரசை விமர்சிப்பதுமாக காங்கிரசில் இருப்போர் சிலரின் போக்கு மாறி உள்ளது. காங்கிரஸ் உருவாக்கிவரும் இத்தகைய புகைச்சல்களால் அதிருப்தியடைந்த திமுக தலைமை, கூட்டணி தொடர்பாக ஒரு முடிவெடுக்கப்படும்படி காங்கிரஸ் தலைமைக்கு செய்தி அனுப்பியதாகத் தெரிகிறது. இந்தநிலையில், முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விஜய் கட்சியுடன் கூட்டணியை…
வரும் ஜனவரி 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஜாக்டோ-ஜியோ, போட்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித் துறையின்செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு, ஜாக்டோ-ஜியோ, தலைமைச் செயலக சங்கம், ஆசிரியர்கள் சங்கம் உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கடந்த அக்டோபரில் இடைக்கால அறிக்கையையும் கடந்த 30ம் தேதி முழு அறிக்கையையும் அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜன. 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ, போட்டோ ஜியோ உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை டிசம்பர் 22-ம்…
‘2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியானது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில்தான்’. ஆரம்பத்தில் அவ்வளவு உரக்கச் சொல்லாத இந்த வார்த்தைகளை தற்போது சத்தமாகவே சொல்லத் தொடங்கியிருக்கிறார், தவெக தலைவர் விஜய். ஒருபுறம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து எந்த எதிர்மறை விமர்சனங்களையும் வைப்பதில்லை, மறுபுறம் அதே இருவரால் வலுவான ஓட்டு வங்கியுடைய கட்சியாக வளர்த்தெடுக்கப்பட்ட, இன்றும் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அந்தக் கட்சியைப் பொருட்படுத்தாதது போல் காட்டிக்கொள்கிறார். இருப்பினும் திமுகவை தொடர்ந்து விமர்சித்து பேசுவதன் மூலம், “திமுகவின் எதிரி மற்றும் அதிமுகவுக்கு மாற்று ‘தவெக’ தான்” என நிறுவ விஜய் முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்தநிலையில் விஜய்க்கு மறைமுகமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த உதயநிதி, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் திமுகவுக்கு எதிரான பலம் வாய்ந்த போட்டியாளர்கள் யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நீண்டகாலமாக பிரதான போட்டியாளராக இருந்த அதிமுக பலவீனமாக இருந்தாலும் தற்போது…
இந்தியாவில் வலி, காய்ச்சல் மற்றும் வீக்கத்திற்காக பரவலாக பயன்படுத்தப்படும் Nimesulide மருந்தின்100 mg க்கும் அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளுக்கும் மத்திய அரசு உடனடி தடைவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 100 மி.கி.க்கு மேற்பட்ட அளவில் உடனடி விளைவளிக்கும் (immediate release) வகையிலான நைமிசுலைடு (nimesulide) வாய்வழி மருந்துகளை தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், அந்த மருந்துக்கு பாதுகாப்பான மாற்றுகள் கிடைக்கின்றன என்றும் மத்திய அரசு அறிந்துள்ளது. மனித பயன்பாட்டுக்காக நாட்டில் இந்த மருந்தை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் வினியோகிப்பதை தடை செய்வது பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே, மருந்து பொருட்கள் சட்டப்பிரிவுகளின்படி 100 மி.கி.க்கு மேல் நிம்சுலைடு கொண்ட அனைத்து வாய்வழி மருந்துகளும் தடை செய்யப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.
மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்தினருடன் தாய்லாந்தில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மகேந்திர சிங் தோனி மீண்டும் ஒருமுறை செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, இந்தியாவிற்கு வெளியே தாய்லாந்தில் 2026-ஆம் ஆண்டை வரவேற்றார். அவரது மனைவி சாக்ஷி தோனி, சமூக வலைதளங்களில் ஒரு சிறப்புப் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டார், அது உடனடியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் புகைப்படத்தில் தோனி தனது முழு குடும்பத்துடன் காணப்படுகிறார். மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவா, நீண்ட நாட்களுக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றியுள்ளார். ஜிவா இப்போது நன்றாக வளர்ந்துவிட்டதால், இந்தப் புகைப்படத்தைக் கண்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜிவாவின் சிறு வயது வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாவது வழக்கம். ஆனால், இப்போது அவரது புதிய தோற்றத்தைக் கண்டது மக்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. சாக்ஷி தோனியால் பகிரப்பட்ட புகைப்படம்,…
அமெரிக்காவிற்கு பதிலளிக்கும் விதமாக ஆப்பிரிக்க நாடுகளான புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகியவை அமெரிக்க குடிமக்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ளன. டிரம்ப் நிர்வாகம் 39 பிற நாடுகளின் குடிமக்கள் மீது விதித்த இதேபோன்ற பயணத் தடையை எதிர்த்து இரு நாடுகளும் இந்த முடிவை எடுத்துள்ளன. இந்த நடவடிக்கை சர்வதேச பயணம் மற்றும் இராஜதந்திர உறவுகள் குறித்த புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் 39 நாடுகளின் குடிமக்கள் மீது பயணத் தடையை விதித்தது. இந்த பட்டியலில் ஆப்பிரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களைச் சேர்ந்த பல நாடுகள் அடங்கும், அந்நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இந்த முடிவு சமத்துவத்தின் ஒரு நடவடிக்கையாக எடுக்கப்பட்டதாகவும், அமெரிக்கக் குடிமக்கள் இனி அமெரிக்காவுக்குப் பயணம் செய்யும் தங்கள் நாட்டு குடிமக்களைப் போலவே அதே விதிகளுக்கு உட்படுவார்கள் என்றும் புர்கினா பாசோவும் மாலியும் தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற…
கலியுகம் வந்துவிட்டதா?. 2025-ல் உலகிலேயே ஆபாசப் படங்களுக்கு அதிக செலவு செய்தவர்கள் இந்தியர்கள்தான்!.
2025-ஆம் ஆண்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் வீடியோக்களுக்காக இந்தியர்கள் சுமார் ரூ.1080 கோடி (10.8 பில்லியன்) செலவிட்டுள்ளனர். இதன் மூலம், அந்தத் தளத்தில் அதிக செலவு செய்யும் நாடாக இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தத் தளம், உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் தங்கள் படைப்புகளை விற்பதன் மூலம் பணம் சம்பாதிக்க அனுமதிக்கிறது. இந்து புராணங்களின்படி, காமமும், அநீதியும், வஞ்சகமும், பேராசையும், தீய நடத்தைகளும் அதிகரிக்கும்போது கலியுகம் முடிவடைகிறது. இப்போது ஏன் இதெல்லாம் என்று நீங்கள் யோசிக்கலாம். 2025 ஆம் ஆண்டு முடிந்து 2026 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் இந்தியர்கள் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதற்காக எவ்வளவு பணம் செலவழித்தார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். மக்கள் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதற்காக இத்தனை கோடி ரூபாய்களைச் செலவழித்திருக்கும்போது, கலியுகத்தின் முடிவு மிகவும் நெருங்கிவிட்டது என்பது உறுதியாகிறது. சரி, இப்போது இந்தியர்கள் எவ்வளவு பணம் செலவழித்தார்கள் என்பதைப் பார்ப்போம். 18…
”தி.மு.க., கூட்டணியில் சண்டை போட்டு, கூடுதல் ‘சீட்’ கேட்போமே தவிர, மானத்தை விட்டுவிட்டு விஜய் கூட்டணியில் இணைய மாட்டேன் என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பலர் நீக்கப்பட்டும், பலர் சேர்க்கப்படும் பணிகளும் நிகழ்ந்து வருகிறது. அந்தவகையில் ஒரே மாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 48 மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து திருமாவளவன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தி.மு.க., வலிமையான இயக்கம்; 75 ஆண்டுகள் கடந்து, இன்றும் ஆட்சியில் இருக்கும் இயக்கம். அதற்கு நாங்கள் முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு பதில் சொல்ல தெரியும். நான் தி.மு.க.,வுக்காக பேசவில்லை. நான் உள்வாங்கிய அரசியலுக்காக பேசுகிறேன். சிலருடன் சேர்ந்தால் பாதுகாப்பாகவும் இருக்கும்; பொருளாதாரத்திலும் மேம்பாடு வரும் என்பதற்காக, கொள்கையை மாற்றிக்கொள்ள முடியாது.…
கடந்த சில ஆண்டுகளில் மாரடைப்பு வழக்குகள் கடுமையாக அதிகரித்துள்ளன. இப்போது, மைக்ரோபிளாஸ்டிக் குறித்த ஒரு புதிய ஆய்வு கவலைகளை எழுப்பியுள்ளது. ஆராய்ச்சியின் படி, இந்த சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உடலின் தமனிகளில் குவிந்து, குறிப்பாக ஆண்களுக்கு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு முதல் ஐந்து மில்லிமீட்டர் வரை அளவுள்ள பிளாஸ்டிக் துகள்கள் ஆகும். இன்று, இந்த துகள்கள் உணவு மற்றும் பானங்கள், தண்ணீர் மற்றும் காற்று போன்ற எல்லா இடங்களிலும் உள்ளன. இந்த துகள்கள் இரத்தத்தில் நுழைந்து உடலின் முக்கிய உறுப்புகளில் குவிந்துவிடும் என்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். புதிய ஆராய்ச்சி என்ன வெளிப்படுத்தியது?இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மைக்ரோபிளாஸ்டிக்குகளை ஹார்மோன் கோளாறுகள், கருவுறுதல், நரம்பியல் பாதிப்பு, புற்றுநோய் மற்றும் இதய நோய் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தியுள்ளன. இருப்பினும், இதய நோயைப் பொறுத்தவரை, மைக்ரோபிளாஸ்டிக்குகள் தமனிகளை நேரடியாகப் பாதிக்கின்றனவா அல்லது அந்த நோயுடன் தொடர்புடையதாக…