Author: Editor web3
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை வரும் 8ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இருப்பினும், ரொக்க பணம் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசின் தரப்பில் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை இருப்பினும் இன்று அல்லது நாளை ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக தனி அரசாணையும் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது இந்த நிலையில் தான் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் எட்டாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசு தொகப்பு விநியோகத்தை சென்னையில் முதலமைச்சராக தொடங்கி வைக்க உள்ளார்
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மு.க.ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி – சீமான் ஆகியோருடன் முதலமைச்சர் நாற்காலிக்கு தவெக தலைவர் விஜய்யும் களமிறங்கியுள்ளார். கரூர் சம்பவத்திற்கு பிறகு முடங்கிய தவெக-விற்கும், விஜய்க்கும் அதிமுக-வின் முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கட்சியில் இணைந்தது அவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்தது. செங்கோட்டையன் வருகைக்கு பிறகு பல்வேறு முக்கிய ஆலோசனைகளும் அவருடன் கலந்தாலோசித்தே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செங்கோட்டையன் மூலமாக பல்வேறு கட்சியின் முக்கிய புள்ளிகளை தவெக பக்கம் இழுக்க விஜய் முடிவு செய்துள்ளார். அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளை தவெக பக்கம் இழுக்க காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்தநிலையில், எடப்பாடி மீது அதிமுகவில் முக்கிய புள்ளிகளும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதிமுகவில் எதிர்பார்த்த சில முக்கிய புள்ளிகள் விருப்பமனு அளிக்கவில்லை என்ற தகவல் எடப்பாடி…
பொங்கல் பரிசு தொகுப்புகளுக்கான டோக்கன்கள் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பரிசு தொகுப்பும், சில நேரங்களில் ரொக்க பணமும் வழங்கப்படும். கடந்த 2022-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ரொக்க பணம் கொடுக்கப்படவில்லை. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்க பணம் வழங்கப்படலாம் என பொதுமக்கள் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். இதற்கிடையில் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு -2026 என்ற தலைப்பில் டோக்கன் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி போன்றவை வந்துவிட்டன.பொங்கல் பரிசு தொகுப்புடன்…
600 கிலோ எடையுடன் கின்னஸ் சாதனை படைத்தவரும் உலகின் மிக அதிக எடை கொண்டவருமான மெக்சிகோவை சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ காலமானார். மெக்சிகோவின் அகுவாஸ்காலி யன்ஸ் நகரைச் சேர்ந்தவர் ஜுவான் பெட்ரோ பிராங்கோ (40). கடந்த 2018ம் ஆண்டில் இவரது உடல் எடை 595 கிலோவை எட்டியதால் மிகவும் அவதிப்பட்டார். உலகின் குண்டு மனிதராக (ஆண்) கருதப்படும் இவர், தனது உடல் எடையை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்தார். இதற்காக அந்நாட் டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு முதல்கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. உலகின் அதிக எடை கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனை படைத்த இவர், ஒரு கட்டத்தில் இவரால் படுக்கையை விட்டு நகரக்கூட முடியாத நிலை இருந்தது; இவரை இடமாற்றம் செய்யவே எட்டுப் பேர் கொண்ட குழு தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு…
ஆஸ்திரேலியாவின் அனுபவமிக்க தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது, அதன் இறுதிப் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிதான் உஸ்மான் கவாஜாவின் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும். உஸ்மான் கவாஜா தனது டெஸ்ட் அறிமுகத்தையும் இதே மைதானத்தில்தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2025-26 ஆஷஸ் தொடரின் இந்த இறுதிப் போட்டி ஜனவரி 4, 2026 அன்று தொடங்கும். உஸ்மான் கவாஜா 2010-11 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமானார். ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய முதல் பாகிஸ்தானிய வம்சாவளி வீரர் ஆவார். அவர் தனது நான்காவது வயதில் தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவின் நியூ…
பல வாழ்க்கை முறை தவறுகள் உங்களை முன்கூட்டியே வயதாக்கிவிடும். தூங்கும் போது நீங்கள் தவிர்க்க வேண்டியவைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள் முதுமையின் விளைவுகளைக் குறைக்க நாம் பெரும்பாலும் சருமப் பராமரிப்புப் பொருட்கள், சிகிச்சைகள் மற்றும் உணவுமுறை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம், ஆனால் அதிகம் விவாதிக்கப்படாத ஒரு முக்கியமான அம்சம் நீங்கள் தூங்கும் நிலைதான். உண்மையில், நீங்கள் தூங்கும் நிலை உங்கள் சருமத்தை முன்கூட்டியே முதுமையடையச் செய்வதில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கக்கூடும். காலையில் எழுந்திருக்கும்போது உங்கள் கன்னங்களில் ஆழமான கோடுகளையோ அல்லது கண்களைச் சுற்றி வீக்கத்தையோ நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இந்த அறிகுறிகள் ஆரம்பத்தில் சிறிது நேரத்திற்குப் பிறகு தானாகவே மறைந்துவிடும், ஆனால் அவை தினமும் நீடித்தால், அவை படிப்படியாக சருமத்தின் மீள்தன்மை மற்றும் முக அமைப்பை பாதிக்கக்கூடும். கேள்வி என்னவென்றால், சில தூங்கும் நிலைகள் நீண்ட காலப்போக்கில் சுருக்கங்கள் அல்லது தளர்வான சருமத்தை ஏற்படுத்துமா? என்பதுதான். பிஎஸ்ஆர்ஐ மருத்துவமனையின் பிசியோதெரபிஸ்ட்டான டாக்டர்…
முட்டைகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, அதனால்தான் அதிக எண்ணிக்கையிலான மக்கள் அவற்றை சாப்பிடுகிறார்கள். ஆனால் முட்டைகளை சரியாக வேகவைப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? முட்டையை வேகவைப்பது எளிமையாகத் தோன்றலாம், ஆனால் சரியான பதத்தைப் பெறுவது எப்போதும் எளிதல்ல. பெரும்பாலும், முட்டையின் மஞ்சள் கரு காய்ந்து, உதிரியாகிவிடுகிறது, அதே சமயம் முட்டையின் வெள்ளைக்கரு பிசுபிசுப்பாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், மஞ்சள் கருவும் வெள்ளைக்கருவும் வெவ்வேறு வெப்பநிலைகளில் வேகின்றன, இது சரியான சமநிலையை அடைவதை கடினமாக்குகிறது. ஆனால், இந்த நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காணக்கூடிய ஒரு முட்டை வேகவைக்கும் முறையை புதிய ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. ஒரு முட்டையில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன: மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக் கரு. மஞ்சள் கரு சுமார் 65°C வெப்பநிலையில் வேகும், அதே சமயம் வெள்ளைக் கருவுக்கு சுமார் 85°C வெப்பநிலை தேவைப்படுகிறது. பொதுவாக, ஒரு முட்டையை 100°C வெப்பநிலையில் வேகவைக்கும்போது,…
திருச்சியில் வைகோவின் நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதை காங்கிரஸ் புறக்கணிப்பதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உரிமைகளை மீட்கவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ “சமத்துவ நடைபயணம்” என்கிற பெயரில் தனது 11-வது நடைபயணத்தை திருச்சியில் இன்று (ஜன.2) தொடங்கி, மதுரையில் வரும் 12-ம் தேதி நிறைவு செய்கிறார். நிகழ்ச்சிக்கு, அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகிக்கிறார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகிக்கிறார். மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை வைகோ வரவேற்றுப் பேசுகிறார். விழாவில், திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்தநிலையில், இதனை புறக்கணிப்பதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
தொப்பை அதிகரிப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள், ஆனால் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை என்றால், வெறும் வயிற்றில் வீட்டில் தயாரிக்கப்பட்ட சில பானங்களை குடிப்பது எடை மற்றும் தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும். நாம் அனைவரும் ஒரு பிரச்சனையைப் பற்றி கவலைப்படுகிறோம். தொப்பை கொழுப்பு, இது ஒரு பொதுவான பிரச்சினையாகிவிட்டது. அதை நீக்க அல்லது குறைக்க, மக்கள் தினசரி உடற்பயிற்சிகள் மற்றும் யோகாவை நாடுகிறார்கள், அவை உடல் கொழுப்பைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இருப்பினும், வயதானவர்கள் மற்றும் நமது அதிகரித்து வரும் பிஸியான வாழ்க்கை முறை காரணமாக, உடற்பயிற்சிகள் மற்றும் யோகாவிற்கு நாம் பெரும்பாலும் நேரம் ஒதுக்குவதில்லை. இது எடை மற்றும் தொப்பை கொழுப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது, இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை நிரூபிக்கக்கூடும். அதிகப்படியான கொழுப்பை நீக்க அல்லது குறைக்க, நீங்கள் வீட்டிலேயே பலவிதமான பானங்களை தயாரிக்கலாம். வெறும் வயிற்றில், அதாவது அதிகாலையில் அவற்றைக் குடிப்பது, தொப்பை கொழுப்பைக்…
கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உச்சத்தை எட்டி ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று (ஜன.1)ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.99,520 விற்பனை ஆனது. ஒரு கிராம் 12 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் 256 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜன.2) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 ரூபாய்ந்து உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு…