Author: Editor web3

தென் அமெரிக்க நாடான வெனிசுலா – அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், வெனிசுலாவில் திடீரென ஏற்பட்ட பலத்த வெடிச்சத்தங்கள், அந்தப் பகுதி முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. தலைநகர் கராகஸ் உட்பட பல பகுதிகளில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. https://x.com/petrogustavo/status/2007347473073999942? குண்டுவெடிப்புகள் தலைநகர் கராகஸில் மட்டும் நிகழவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்கேடியா ( Maiquetia)நகருக்கு அருகிலுள்ள லா குய்ரா (La Guaira port )துறைமுகப் பகுதியிலும் வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்தப் பகுதி முக்கிய துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்தைக் கொண்டிருப்பதால், இது மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வெடிப்புகள் ஏற்பட்ட உடனேயே, நிலைமை மிகவும் மோசமடைந்ததால், வெனிசுலாவின் வான்வெளி கிட்டத்தட்ட முழுமையாக காலி செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல விமானங்கள் தங்கள் வழித்தடங்களை மாற்றியமைத்தன, இது சர்வதேச விமானப் போக்குவரத்தைப் பாதித்தது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து,…

Read More

TAPS பென்ஷன் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அரசு ஊழியர்கள் சங்கங்கள், வரும் 6ம் தேதி நடக்க இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், அரசு துறைகளில் காலியாகவுள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவது, 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்குவது, ஊதிய முரண்பாடுகளை களைவது என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் – ஆசிரியர் சங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வந்தனர் ஆர்ப்பாட்டம், அடையாள உண்ணாவிரதம், கோரிக்கை முழுக்கம் என பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 6 முதல் காலரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு அண்மையில் அறிவித்தது. இந்தநிலையில், இதுதொடர்பாக, அமைச்சர்கள் குழு, அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அப்போது, ஓய்வூதிய…

Read More

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையின் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரிய முறையில் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதாவது தமிழர்களின் பாரம்பரியமான, வாடி வாசலில் சீறிப்பாய்ந்து அனல் பறக்க வரும் ஜல்லிக்கட்டு காளைகளை ஜல்லிக்கட்டு வீரர்கள் அடக்கி விளையாடும் விளையாட்டு என்பது மதுரை மண்ணிற்கான அடையாளமாக கருதப்படுகின்றது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகள்  ஜனவரி 17-ஆம் தேதி அலங்காநல்லூர் பகுதியிலும், 15ஆம் தேதி அவனியாபுரம் பகுதியிலும், 16ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற பாலமேடு பகுதியிலும் கோலாகலமாக நடைபெற இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார். இதற்காக, அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு வாடிவாசல் தூய்மைப்படுத்துதல், மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

Read More

அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme) செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வருகின்றன. வருகிற 6-ந்தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22-ந் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அந்த கூட்டமைப்புகள் தெரிவித்தன. இதனிடையே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை அளித்தது. இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள…

Read More

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக,  காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தவெக-வுடன் இணையக்கூடும் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. தற்போதைய நிலையில் காங்கிரஸால் திமுகவை விட்டு வெளியேற முடியாது என்றாலும், தொகுதிகளை பேரம் பேசுவதற்கு ‘விஜய் கார்டை’ ஒரு ஆயுதமாக பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதிக இடங்களைப் பெறவும், கூட்டணியில் தங்களின் முக்கியத்துவத்தை நிலைநாட்டவும் இத்தகைய சலசலப்புகளை கூட்டணிக் கட்சிகள் உருவாக்கி வருகின்றன. இது 2026 தேர்தலில் திமுகவிற்கு தொகுதி பங்கீட்டில் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், எம்.பி. ஜோதிமணியின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற கருத்துகள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தலாம். உட்கட்சி விவகாரங்களை நிர்வாகிகள் பொதுவெளியில் பேசக்கூடாது. கட்சியின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டே நிர்வாகிகள் நடக்க வேண்டும்.…

Read More

வங்கதேசத்தில் நடந்த இந்துக்களுக்கு எதிரான சம்பவங்களைத் தொடர்ந்து, முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் கேகேஆர் அணியைச் சுற்றியுள்ள சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், கேகேஆர் அணிக்கு மாற்று வீரரைக் கண்டுபிடிக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் நடந்த இந்துக்களுக்கு எதிரான சம்பவங்கள் மற்றும் பரவலான கொந்தளிப்பைத் தொடர்ந்து, வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானின் பெயர் செய்திகளில் அடிபட்டு வருகிறது. அவர் ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார், ஆனால் இப்போது ஐபிஎல்-லில் அவரது பங்கேற்பு சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. https://x.com/ANI/status/2007321016473924042? ஏஎன்ஐ அறிக்கையின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முஸ்தாபிசுர் குறித்து கேகேஆர் அணியிடம் பேசியுள்ளதுடன், அவருக்குப் பதிலாக மாற்று வீரரைத் தேடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. KKR மற்றும் முஸ்தாஃபிஜுர் இருவரும் நாட்டிற்குள் பெரும் எதிர்ப்பினை எதிர்கொண்டுள்ளனர். முன்னாள் உத்திரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் சங்கீத்சோம் கூட தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தச் சூழ்நிலை கேகேஆர் நிர்வாகத்திற்கு சங்கடமானதாகக் கருதப்படுகிறது. அணி ஐபிஎல் தொடருக்காகத்…

Read More

கனடாவில் வசிக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களின் சட்டப்பூர்வ குடியுரிமையை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். கனடாவில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவர்களில் ஏறக்குறைய பாதி பேர் இந்தியர்களாக இருப்பார்கள். கனடாவில் லட்சக்கணக்கான பணி அனுமதிகள் (work permits) காலாவதியாக உள்ளன. குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்தின் (IRCC) தரவுகளின்படி, சுமார் 10,53,000 பணி அனுமதிகள் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் காலாவதியாகும் என்றும், மேலும் 9,27,000 அனுமதிகள் 2026 ஆம் ஆண்டில் காலாவதியாகும் என்றும் குடிவரவு ஆலோசகர் கன்வர் செரா தெரிவித்துள்ளார். வேலை அனுமதி பெற்றவர்கள் மற்றொரு விசாவைப் பெற்றாலோ அல்லது நிரந்தரக் குடியுரிமை பெற்றாலோ, அவர்களின் சட்டப்பூர்வ நிலை தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என்று கன்வர் செரா கூறியதாக ஹிந்துஸ்தான் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான குடியேற்ற விதிகளை கனடிய அரசாங்கம் தொடர்ந்து கடுமையாக்கி…

Read More

தெற்கு பிரேசிலில் பேருந்தும் ஒரு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். தெற்கு பிரேசில் ரியோ கிராண்டே டோ சுலில் உள்ள நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) பயணிகள் பேருந்தும் மணல் ஏற்றப்பட்ட லாரியும் மோதி ஒரு துயரமான சாலை விபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, உள்ளூர் நேரப்படி நேற்று காலை 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து மிகவும் கடுமையாக இருந்ததால், லாரியின் மணல் பெரும்பகுதி பேருந்தின் உள்ளே தள்ளப்பட்டது, இதனால் பயணிகளை வெளியேற்றுவது மிகவும் கடினமாக இருந்தது.   பிரேசிலின் ஃபெடரல் நெடுஞ்சாலை காவல்துறையினர் கூற்றுப்படி, பேருந்தின் மேற்பகுதி மணலால் கடுமையாக சேதமடைந்ததால், காயமடைந்தவர்களையும் இறந்தவர்களையும் அணுகுவதில் தாமதம் ஏற்பட்டது. பயணிகளை மீட்க பல மணி நேர முயற்சிக்குப் பிறகு அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன. இந்த…

Read More

ஏமனில் பல ஆண்டுகளாக தொடரும் உள்நாட்டு மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவுடன் செயல்படும் தெற்கு மாற்று கவுன்சிலின் (Southern Transitional Council) கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை குறிவைத்து, சவூதி அரேபியா தலைமையிலான இராணுவ கூட்டணி நேற்று( ஜனவரி 2 ) வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஐக்கிய அரபு அமீரகம் ஏமனில் தனது இராணுவ இருப்பை முடிவுக்குக் கொண்டு வருவதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் , இந்த தாக்குதல் நிகழ்ந்திருப்பது அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. AFP செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி, இந்த வான்வழித் தாக்குதல்கள் ஹத்ரமௌத் மாகாணத்தின் சையூன் மற்றும் அல்-காஷா பகுதிகளில் உள்ள இராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டன. இந்தத் தாக்குதல்கள் ஒரு இராணுவத் தளம் மற்றும் ஒரு விமான நிலையத்தையும் குறிவைத்ததால், அப்பகுதியில் விமானப் போக்குவரத்து முடங்கியது. பல மணி நேரம் எந்த விமானமும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால், பொதுமக்களிடையே…

Read More

சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் சில பதிவுகளில் முன்வைக்கப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து, இந்த முறை அரசு 500 ரூபாய் நோட்டையும் மதிப்பிழப்பு செய்யப் போகிறதா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்யும் முடிவை மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள மக்கள் வங்கிகளும் ஏடிஎம் மையங்களும் முன் நீண்ட வரிசைகளில் காத்திருந்த காட்சிகள் எங்கும் காணப்பட்டன. அந்த நாட்களின் நினைவுகள் இன்றும் மக்களின் மனதில் தெளிவாக பதிந்துள்ளன. இதற்கிடையில், மதிப்பிழப்பு குறித்து மீண்டும் தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் ஒரு பதிவில், 2026 மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகளை அரசு தடை செய்யலாம்…

Read More