Author: Editor web3
கனடாவில் வசிக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களின் சட்டப்பூர்வ குடியுரிமையை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். கனடாவில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவர்களில் ஏறக்குறைய பாதி பேர் இந்தியர்களாக இருப்பார்கள். கனடாவில் லட்சக்கணக்கான பணி அனுமதிகள் (work permits) காலாவதியாக உள்ளன. குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்தின் (IRCC) தரவுகளின்படி, சுமார் 10,53,000 பணி அனுமதிகள் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் காலாவதியாகும் என்றும், மேலும் 9,27,000 அனுமதிகள் 2026 ஆம் ஆண்டில் காலாவதியாகும் என்றும் குடிவரவு ஆலோசகர் கன்வர் செரா தெரிவித்துள்ளார். வேலை அனுமதி பெற்றவர்கள் மற்றொரு விசாவைப் பெற்றாலோ அல்லது நிரந்தரக் குடியுரிமை பெற்றாலோ, அவர்களின் சட்டப்பூர்வ நிலை தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என்று கன்வர் செரா கூறியதாக ஹிந்துஸ்தான் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான குடியேற்ற விதிகளை கனடிய அரசாங்கம் தொடர்ந்து கடுமையாக்கி…
தெற்கு பிரேசிலில் பேருந்தும் ஒரு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். தெற்கு பிரேசில் ரியோ கிராண்டே டோ சுலில் உள்ள நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) பயணிகள் பேருந்தும் மணல் ஏற்றப்பட்ட லாரியும் மோதி ஒரு துயரமான சாலை விபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, உள்ளூர் நேரப்படி நேற்று காலை 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து மிகவும் கடுமையாக இருந்ததால், லாரியின் மணல் பெரும்பகுதி பேருந்தின் உள்ளே தள்ளப்பட்டது, இதனால் பயணிகளை வெளியேற்றுவது மிகவும் கடினமாக இருந்தது. பிரேசிலின் ஃபெடரல் நெடுஞ்சாலை காவல்துறையினர் கூற்றுப்படி, பேருந்தின் மேற்பகுதி மணலால் கடுமையாக சேதமடைந்ததால், காயமடைந்தவர்களையும் இறந்தவர்களையும் அணுகுவதில் தாமதம் ஏற்பட்டது. பயணிகளை மீட்க பல மணி நேர முயற்சிக்குப் பிறகு அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன. இந்த…
ஏமனில் பல ஆண்டுகளாக தொடரும் உள்நாட்டு மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவுடன் செயல்படும் தெற்கு மாற்று கவுன்சிலின் (Southern Transitional Council) கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை குறிவைத்து, சவூதி அரேபியா தலைமையிலான இராணுவ கூட்டணி நேற்று( ஜனவரி 2 ) வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஐக்கிய அரபு அமீரகம் ஏமனில் தனது இராணுவ இருப்பை முடிவுக்குக் கொண்டு வருவதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் , இந்த தாக்குதல் நிகழ்ந்திருப்பது அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. AFP செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி, இந்த வான்வழித் தாக்குதல்கள் ஹத்ரமௌத் மாகாணத்தின் சையூன் மற்றும் அல்-காஷா பகுதிகளில் உள்ள இராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டன. இந்தத் தாக்குதல்கள் ஒரு இராணுவத் தளம் மற்றும் ஒரு விமான நிலையத்தையும் குறிவைத்ததால், அப்பகுதியில் விமானப் போக்குவரத்து முடங்கியது. பல மணி நேரம் எந்த விமானமும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால், பொதுமக்களிடையே…
சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் சில பதிவுகளில் முன்வைக்கப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து, இந்த முறை அரசு 500 ரூபாய் நோட்டையும் மதிப்பிழப்பு செய்யப் போகிறதா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்யும் முடிவை மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள மக்கள் வங்கிகளும் ஏடிஎம் மையங்களும் முன் நீண்ட வரிசைகளில் காத்திருந்த காட்சிகள் எங்கும் காணப்பட்டன. அந்த நாட்களின் நினைவுகள் இன்றும் மக்களின் மனதில் தெளிவாக பதிந்துள்ளன. இதற்கிடையில், மதிப்பிழப்பு குறித்து மீண்டும் தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் ஒரு பதிவில், 2026 மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகளை அரசு தடை செய்யலாம்…
ராணி வீரமங்கை வேலு நாச்சியார் ஜனவரி 3, 1730 அன்று பிறந்தார். அவர் இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி மற்றும் சக்கந்தி முத்தாளின் ஒரே மகளாக இருந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னணி பெண் வீராங்கனைகளில் ஒருவராக இவர் புகழ்பெற்றார். அரச குடும்பத்தில் பிறந்ததால் கல்வி, சமூக பணிகள் மற்றும் அரசியல் அறிவில் சிறந்த பயிற்சி பெற்றவர். அதன்படி, வீரமங்கை வேலுநாச்சியாரின் 296வது பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த வேலுநாச்சியாரின் தியாகமும் தொலைநோக்கு தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என்று கூறியுள்ளார். https://x.com/narendramodi/status/2007279340686565551? மேலும், காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என்று தெரிவித்து…
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று (ஜனவரி 3) முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த 22ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நேற்று காலை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 22 ஆண்டுகளுக்கும் மேலாக…
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போாராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்றும் 8-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த தேர்லில் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இந்தநிலையில், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே போராடி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என்றும் அவர்களை கைவிட மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசு ஒரு கட்டத்தில் நிற்பதாக கூறிய அவர், போராட்டம் நடத்துபவர்கள் மற்றொரு கட்டத்தில் இருப்பதாகவும் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர் 9 பேரை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த அராஜக போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் முடிவு கிட்டியதாய் இல்லை. இந்த நிலையில், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, மீண்டும் தமிழக (மயிலாடுதுறை) மீனவர்கள் 9 பேரை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, தமிழக மீனவர்களை காங்கேசன் துறைமுக முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.1,00,160 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.12,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) ஒரு கிராம் தங்கம் ரூ. 12,580க்கும், ஒரு சவரன் ரூ.1,00,640 க்கும் விற்பனை ஆனது. இந்தநிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று இறங்கியதே இதற்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.256-ஆகவும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.2,56,000-ஆகவும் விற்பனை. தொழில்துறை தேவை சற்று குறைந்ததால் வெள்ளி விலை இறங்கியுள்ளது. ஆய்வகங்கள், தொழில் வட்டாரங்கள், வெள்ளிப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் இந்த குறைவால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். Share.FacebookTwitterWhatsAppTelegramLinkedIn
கர்நாடகா பெல்லாரியில் நாளை (ஜனவரி 3ஆம் தேதி) நடைபெறவிருந்த வால்மீகி சிலை திறப்பு விழாவை முன்னிட்டு பேனர் வைப்பதில் பாஜக – காங்கிரஸ் இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதால் பதற்றம் நிலவிவருகிறது. கர்நாடகாவின் பெல்லாரியில், ஒரு பதாகை வைப்பது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ ஜனார்த்தன ரெட்டி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத் ரெட்டி ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. விவகாரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காங்கிரஸ் தொண்டர் உயிரிழந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ. ஜனார்த்தன ரெட்டி உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை கூற்றுப்படி, வியாழக்கிழமை (ஜனவரி 1, 2026) நடந்த இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது, “நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. எந்தவித விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன,” என்று…