Author: Editor web3
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில், அன்புமணி ராமதாஸ் தான் பாமகவின் தலைவர் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இந்தச் சூழலில், அன்புமணி போலி ஆவணம் சமர்ப்பித்ததாக ராமதாஸ் தரப்பில் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உட்கட்சி பூசல் நீடித்து வரும் நிலையில், துரோகிகள் இருக்கும் வரை ஒன்றிணைய முடியாது என்று அன்புமணி கூறியது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. அன்புமணியின் இந்த குற்றச்சாட்டுக்கு ராமதாஸ் தரப்பை சேர்ந்த மூத்த தலைவரான ஜி.கே. மணி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாகப் பதிலளித்தார். அவர் பேசுகையில், “தந்தையையும் மகனையும் பிரித்துவிட்டதாக மனசாட்சி இல்லாமல் அன்புமணி பேசுகிறார். அன்புமணியை வளர்த்துவிட வேண்டும்…
உள்துறை அமைச்சர் அமித்ஷா-தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பின்போது, தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் அடங்கிய பட்டியல் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியுடன், நாகேந்திரன் கலந்துரையாடல்களை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தநிலையில், அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் இது ஒரு மரியாதைக்குரிய சந்திப்பு என்றும், சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை குறித்து விவாதிக்கவில்லை என்றும் கூறினார். ஜனவரி 9 ஆம் தேதி தமிழ்நாட்டில் தனது யாத்திரையின் நிறைவு நாளில் பங்கேற்கமாறும் அமித்ஷாவிடம் கூறியதாகவும் நாகேந்திரன் தெரிவித்தார். முன்னதாக, சனிக்கிழமை அன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் நாகேந்திரன்…
இந்தியாவின் நகர்ப்புற நிலப்பரப்பு, உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பல பெருநகரங்களால் வரையறுக்கப்படுகிறது. இந்த நகரங்கள், இந்தியாவின் மக்கள் தொகையின் பெரும்பகுதியைத் தாங்கிக் கொள்வது மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் செழுமையான கலாச்சார மரபுகளின் அடித்தளமாகவும் திகழ்கின்றன. அவற்றின் மக்கள்தொகை, தேசிய மற்றும் உலகளாவிய அரங்கில் அவற்றின் தனித்துவமான பங்குகளைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை உச்சத்தில் இருப்பது தேசிய தலைநகர் டெல்லியாகும். 3.3 கோடி மக்களைக் கொண்ட டெல்லி, நாட்டின் நிர்வாக மற்றும் அரசியல் நடவடிக்கைகளின் மையப்புள்ளியாகும். இதன் முக்கியத்துவம் நவீன அரசியலில் மட்டுமல்லாமல், பல்லாயிரம் ஆண்டுகால வளமான வரலாறு மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்திலும் வேரூன்றியுள்ளது. பல்வேறு பேரரசுகளின் மையமாக இருந்த டெல்லியின் தொன்மை, அதன் ஒவ்வொரு பகுதியிலும் பிரதிபலிக்கிறது. 2.1 கோடி மக்களைத் தன்னகத்தே கொண்ட மும்பை, நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 2வது இடத்தில் உள்ளது.இது இந்தியாவின் வணிக மற்றும் வர்த்தகத்தின் நரம்பு…
கோவிட் தடுப்பூசியில் விரைவில் கருப்புப் பெட்டியை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது எதைக் குறிக்கிறது மற்றும் அது செலுத்தப்பட்ட பிறகு மருந்துகள் எவ்வளவு ஆபத்தானதாகக் கருதப்படுகின்றன என்பதை தெரி்ந்துகொள்வோம். அமெரிக்க எஃப்.டி.ஏ விரைவில் கோவிட் தடுப்பூசிகள் குறித்து அதன் மிகத் தீவிரமான எச்சரிக்கையான கருப்புப் பெட்டி எச்சரிக்கையை வெளியிடத் தயாராகி வருகிறது. மருந்துகளின் மேல் பகுதியில் தடித்த எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ள அதே எச்சரிக்கை இதுவாகும், மேலும் மருந்து ஒரு தீவிரமான அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாகக் குறிக்கிறது, இது பயன்படுத்துவதற்கு முன்பு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். சி.என்.என் அறிக்கையின்படி, எஃப்.டி.ஏ-வுக்குள் இந்த நடவடிக்கை டிரம்ப் நிர்வாகம் மீண்டும் தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. கருப்புப் பெட்டி எச்சரிக்கை என்றால் என்ன? ஒரு மருந்து மரணம், பக்கவாதம், கடுமையான இதய பாதிப்பு அல்லது இயலாமைக்கு வழிவகுக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்போது பொதுவாக கருப்புப் பெட்டி எச்சரிக்கை…
தேர்தல் ஆணையத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடி, பிரதமர் மோடி சட்டத்தை மாற்றிவிட்டதாகவும், பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டாக சதி செய்வதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும், நமது அரசியலமைப்பை அழிக்கும் இந்த முயற்சிகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் ‘வோட் சோர் காடி சோட்’ என்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, தனது கட்சி “சத்தியத்துடன்” நிற்கிறது என்று கூறி, “நரேந்திர மோடி-ஆர்.எஸ்.எஸ் அரசாங்கத்தை” அதிகாரத்தில் இருந்து அகற்றுவதாக சபதம் செய்தார். தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடிய ராகுல், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பாஜகவுக்காக வேலை செய்வதாக குற்றம்…
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் இன்று மாலை யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். இதில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர். பல மாதங்கள் திட்டமிட்டு நடந்ததாக கருதப்படும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு ஒரு நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்; மற்றொருவர் சுடப்பட்டு, சிகிச்சைக்காக காவல் கட்டுப்பாட்டில் உள்ளார். வெடிபொருள் தேடுதல் வேட்டையும் தொடர்கிறது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன. இந்தநிலையில் போண்டி கடற்கரையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள…
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். யூத பண்டிகையை கொண்டாடுவதற்காக கூடியிருந்த மக்கள் மீது ஆயுதமேந்திய தாக்குதல்காரர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) ஒரு யூத பண்டிகையின் போது ஒரு பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு நடந்தது. ஆயுதமேந்திய இரண்டு தாக்குதல்காரர்கள் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்று மாலை 5 மணி அளவில் கடற்கரையில் ஏராளமான மக்கள் கூடியிருந்ததாகவும், எட்டு நாள் புனித ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளைக் கொண்டாட அங்கு கூடியிருந்த யூதர்களில் கணிசமானவர்கள் என்று ஆஸ்திரேலிய ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிட்னி பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதல் நடத்திய இருவரையும் கைது செய்துள்ளன.…
திமுகவின் இளைஞர் அணியினர் கட்டுப்பாடு உள்ளவர்கள் என்றும் கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தால் எதுவும் செய்யமுடியாது என்று விஜய்யை தாக்கி உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். திருவண்ணாமலை மலப்பாம்பாடி பகுதியில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு இன்று(டிச. 14) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகவை தோற்கடித்துவிடலாம் என்று பலர் போடும் கணக்கை இளைஞர் அணி சுக்குநூறாக உடைக்கும் என்று தெரிவித்துள்ளார். “இன்று பல கட்சிகளில் மாநாடு என்றால் இளைஞர்களை திரட்டுவது மிக கஷ்டம். ஆனால் திமுகவில் மட்டும்தான் இளைஞரணி நிர்வாகிகளையே மாநாடு போல இங்கு கூட்டியிருக்கிறோம். இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் செய்யாத சாதனையை நாம் செய்து காட்டியுள்ளோம். இது கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இளைஞர்கள் அதிகம் கூடினால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்ற பிம்பம் தற்போது உருவாகி உள்ளது. ஆனால் நம் கட்சியினர் அப்படி கிடையாது. அவர்கள்…
பாரதிய ஜனதா கட்சி தனது புதிய தேசியத் தலைவரை அறிவித்துள்ளது. பீகார் அரசாங்க அமைச்சர் நிதின் நபின் கட்சியின் புதிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் வெளியிட்ட கடிதத்தில், “பீகார் அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் நிதின் நபினை பாஜகவின் தேசிய செயல் தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற வாரியம் நியமித்துள்ளது. இவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பதவிக்காலம் முடிந்தும் கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா நீடித்துவரும் நிலையில், செயல் தலைவராக நிதின் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நவீனுக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளத்தில் பதிவைப் பகிர்ந்து கொண்ட மோடி, “நிதின் நவீன் ஒரு கடின உழைப்பாளி பாஜக ஊழியராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அவர் ஒரு இளம், அர்ப்பணிப்புள்ள தலைவர், நிறுவன அனுபவத்தின் செல்வம் கொண்டவர், பீகாரில் பல…
தமிழகத்தில் SIR படிவங்களை பதிவேற்றும் பணி நிறைவடைந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கியது. வீடு வீடாகப் படிவம் விநியோகம் செய்வது, அதனை பூர்த்தி செய்து இணையத்தில் பதிவேற்றுவது ஆகிய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் டிசம்பர் 4 ஆம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பருவமழை உள்ளிட்ட காரணங்களால் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனை ஏற்று S.I.R படிவங்களைச் சமர்ப்பிக்கும் அவகாசம் டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மேலும் 3 நாட்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி S.I.R படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் SIR படிவங்களை பதிவேற்றும் பணிகளுக்கான கால அவகாசம் முடிவடைந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…