Close Menu
    What's Hot

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பெண்ணின் ஹிஜாப்பை நீக்கிய விவகாரம்… நிதிஷ்குமாருக்கு பாகிஸ்தான் கண்டனம்
    இந்தியா

    பெண்ணின் ஹிஜாப்பை நீக்கிய விவகாரம்… நிதிஷ்குமாருக்கு பாகிஸ்தான் கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pakk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இஸ்லாமிய பெண் மருத்துவர் ஒருவரின் ஹிஜாப்பை விலக்கிய சம்பவத்துக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் அரசு மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இதில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்டு மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆணையை பெறுவதற்காக இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்தார். அவரிடம் ஆணையை வழங்கிய முதலமைச்சர் நிதிஷ்குமார், பெண் மருத்துவரின் முகத்தில் இருந்த ஹிஜாப்பை சட்டென விலக்கினார்.

    خدا تعالی کا شکر ہے ہم آزاد ملک میں رہتے ہیں،اللہ پاک اس ملک کو قیامت تک شاد وآباد رکھنا
    اس ملک اور آزادی کی قدر کریں
    پاکستان زندہ باد🇵🇰🇵🇰🇵🇰 pic.twitter.com/HATaFcgpz1

    — Azma Zahid Bokhari (@AzmaBokhariPMLN) December 18, 2025

    இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நிதிஷ் குமாரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் இல்ஸாலிய இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நிதிஷ்குமாருக்கு பாகிஸ்தானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் ஆண்ட்ராபி கூறுகையில் “இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையை இந்தியாவில் உள்ள அனைவரும் உணர வேண்டும். ஒரு இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை மூத்த அரசியல் தலைவர் பலவந்தமாக அகற்றுவதும், அதனைப் பார்த்து மேடையில் இருப்பவர்கள் சிரிப்பதும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    நிதிஷ்குமாரின் இந்த செயலானது, இந்தியாவில் உள்ள முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படுவதை சாதாரணமான விஷயமாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது. எனவே, இத்தகைய செயலை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இச்சம்பவம் குறித்து வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என பாகிஸ்தான் மனித உரிமைகள் கவுன்சிலும் வலியுறுத்தியுள்ளது. எனவே, இந்த சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்” என தாஹிர் ஆண்ட்ராபி கூறினார்.

    இதனிடையே, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தகவல் துறை அமைச்சர் அஸ்மா புகாரி (Azma Bokhari) தனது எக்ஸ் தள பக்கத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதாவது, பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷெரீப் (Maryam Nawaz Sharif), பெண் அதிகாரிக்கு மரியாதை செலுத்தும் வீடியோவையும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இஸ்லாமிய பெண் மருத்துவரின் ஹிஜாப்பை அகற்றும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால்…. தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை
    Next Article ‘பேபி சோப்’-ஐ பெரியவர்கள் பயன்படுத்தலாமா? பக்க விளைவுகள் ஏற்படுமா? ஆய்வு சொல்வது என்ன?
    Editor TN Talks

    Related Posts

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    April 12, 2026

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    திமுகவின் மோசமான நிர்வாகம் அம்பலமாகி வருகிறது!. பிரதமர் மோடி அட்டாக்!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    Trending Posts

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    April 12, 2026

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    April 12, 2026

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.