தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியதாவது ;
“அதிமுக அரசு காவிரி விவகாரத்தில் அற்புதமான தீர்ப்பை பெற்றுத்தந்தது. காவிரி பிரச்சினைக்காக 37 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது. பாஜகவுடன் கூட்டணி அமைத்த கட்சி தான் திமுக. ஆனால் அதிமுக கூட்டணி வைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சி ஆகிவிடுமா?
மத்தியில் 15 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த திமுக தஞ்சைக்கு என்ன திட்டம் கொண்டு வந்தது ? டெல்டாவில் ஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின். மத்திய ஆட்சியில் பங்கு வகித்தபோதும் காவிரி பிரச்சினையை திமுக கண்டுகொள்ளவில்லை. ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது கூட திமுகவால் தமிழகத்திற்கு நிதி பெற முடியவில்லை.
விவசாயிகள் அவதிப்படும்போது எங்கே போனார் டெல்டாக்காரர் ஸ்டாலின்? ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர். கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலை அமைத்து ஆய்வு செய்தவர் ஸ்டாலின். திகார் சிறையில் இருந்தவர்களுக்கு என்னை பற்றி பேச தகுதியில்லை. காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக. ரூ.1,74,000 கோடி 2ஜி அலைக்கற்றை ஊழல்” என்றார்.
