Close Menu
    What's Hot

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    150 ஆண்டுகளுக்கு பின்.. சூரியனின் கோரத்தாண்டவம்!. இந்தியாவுக்கு காத்திருக்கும் கடும் வெப்பமும் வறட்சியும்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»வாக்கு எண்ணும் மையங்கள் அருகே 1கி.மீட்டர் தூரத்துக்கு பாதுகாப்பு வளையம் – ஆதவ் அர்ஜுனா கோரிக்கை
    Featured

    வாக்கு எண்ணும் மையங்கள் அருகே 1கி.மீட்டர் தூரத்துக்கு பாதுகாப்பு வளையம் – ஆதவ் அர்ஜுனா கோரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksMay 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 aahav
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 62 மையங்களைச் சுற்றிலும் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்னதாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் நோக்கில் சில சமூக விரோத சக்திகள், ஸ்ரீரங்கம் தொகுதி எண்: 139-ல் உள்ள தவெக கட்சி அலுவலகத்தை சேதப்படுத்தி தீ வைத்து எரித்துள்ளனர். இந்தச் சம்பவம் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பரவலாக செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த கவலைக்குரிய சூழ்நிலையை உங்கள் அவசர கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

    சமூக விரோத சக்திகள் அமைதியான முறையில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு இடையூறு விளைவிக்கும் உள்நோக்கத்துடனும், நமது கட்சியின் வாக்கு எண்ணும் மையப் பணியாளர்கள் மற்றும் சட்டமன்ற வேட்பாளர்கள் தங்களது தேர்தல் கடமைகளை ஆற்றுவதைத் தடுக்கும் நோக்கத்துடனும் இதுபோன்ற நாசவேலைகளைத் திட்டமிடுவதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

    எனவே, 62 வாக்கு எண்ணும் மையங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும், அத்தகைய மையங்களில் நமது கட்சி வேட்பாளர்கள் மற்றும் தவெக கட்சிப் பணியாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் போதுமான ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்யவும், மேலும் 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு அருகில் பொதுமக்கள் கூடுவதைத் தடுத்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பு வளையத்தை (தனிமைப்படுத்தப்பட்ட மண்டலம்) உருவாக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    ஜனநாயக நலன் கருதி, இந்தப் பிரச்சினையை மிகவும் அவசரமானதாகக் கருதுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்?
    Next Article EVM முறைகேடு எதிரொலி!. மே.வங்கத்தில் 242 கூடுதல் பார்வையாளர்கள் நியமனம்!
    Editor TN Talks

    Related Posts

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    May 2, 2026

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    May 2, 2026

    150 ஆண்டுகளுக்கு பின்.. சூரியனின் கோரத்தாண்டவம்!. இந்தியாவுக்கு காத்திருக்கும் கடும் வெப்பமும் வறட்சியும்!

    May 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    150 ஆண்டுகளுக்கு பின்.. சூரியனின் கோரத்தாண்டவம்!. இந்தியாவுக்கு காத்திருக்கும் கடும் வெப்பமும் வறட்சியும்!

    குப்பைக் கிடங்காகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – சுகாதார சீர்கேட்டால் பயணிகள் அவதி

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு அடுத்த அடி!. அமேசான் பிரைம் ஒப்பந்தம் ரத்து?. கைகொடுக்குமா Zee5?

    Trending Posts

    தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்?

    May 2, 2026

    180-200 இடங்களில் வெற்றி பெறுவோம்!. செங்கோட்டையன் நம்பிக்கை!.

    May 2, 2026

    “சாதி பற்றி பேசினால் உதைப்பேன்!” பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் நிதின் கட்கரி ஆவேசம்!.

    May 2, 2026

    விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை!. RR கேப்டன் ரியான் பராக் !

    May 2, 2026

    தவெக வேட்பாளருக்கு எதிரான மோசடி வழக்கு – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    May 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.