தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்திருந்தார். அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிப்படி, மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு, வரும் மே 15-ஆம் தேதி முதல் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை குறித்துக் கேள்வி எழுப்பினார். கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உரிமைத்தொகையைத் தடையின்றி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இத்திட்டம் குறித்து முதலமைச்சர் விஜய் உரிய உறுதியை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, வருகிற மே 15ஆம் தேதி தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்குகளில் 2,500 ரூபாய் வரவு வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிதிகாரப்பூர்வ அரசாணை மற்றும் வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
