Close Menu
    What's Hot

    மோசடி வழக்கு; திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரனிடம் 4 மணி நேரம் விசாரணை – தன் மீது பொய்க் குற்றச்சாட்டு என பேட்டி

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உதகையில் தொடங்கிய மலர் கண்காட்சி… 10,000 சுற்றுலாப் பயணிகள் கண்டு களிப்பு!
    தமிழ்நாடு

    உதகையில் தொடங்கிய மலர் கண்காட்சி… 10,000 சுற்றுலாப் பயணிகள் கண்டு களிப்பு!

    Editor web1By Editor web1May 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 05 15 15h34m46s308 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம்.

    இச்சமயங்களில் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, புகழ் பெற்ற மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் காரணமாக கோடை விழாக்கள் தாமதமாகியுள்ளன. இதனையடுத்து கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக நூற்றாண்டு அரசு ரோஜா பூங்காவில் நேற்று 21ஆவது ரோஜா மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தொடங்கி வைத்தார்.

    கடந்த ஆண்டு மூன்று நாட்கள் நடத்தப்பட்ட ரோஜா கண்காட்சியை 35 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். இந்த நிலையில், இந்த ஆண்டு அதிக அளவு சுற்றுலா பயணிகள் பார்வையிடுவர்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 5 நாட்கள் ரோஜா மலர் கண்காட்சி நடைபெறும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

    vlcsnap 2026 05 15 15h39m31s609

    இந்த ஆண்டு ரோஜா கண்காட்சிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக சுமார் 1 லட்சம் சிகப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களில் ரோஜா மலர்கள், கார்னேசன் உள்ளிட்ட மலர்களை கொண்டு 12 அடி உயரம், 14 அடி அகலம் கொண்ட அன்னப்பறவை வடிவமைக்க பட்டுள்ளது. ஹார்ன்பில் பறவை, கழுகு வடிவமைப்பும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் வண்ண ரோஜா மலர்களால் கழுகு வடிவமைப்பு, Bar Headed Goose, இந்தியன் பேரடைஸ், பிளை கேட்ச், மலபார் டிராகன் பறவை, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வண்ண வண்ண மலர்களை கொண்டு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது .

     

    மேலும் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 35 ஆயிரம் ரோஜா செடிகளில் ஊதா, வெள்ளை, சிகப்பு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வண்ண, வண்ண ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனிடையே ரோஜா மலர்களுக்கிடையே வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட சாமந்தி மலர்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்காவில் உள்ள ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள பறவை வடிவங்களான உருவாக்கப்பட்டுள்ள உருவங்கள் முன்பு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் முதல் கோடை விழாவாக துவங்கி உள்ள ரோஜா மலர் கண்காட்சியை இதுவரை பத்தாயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article30 வருடத்திற்கு பின்னர் திருச்சி தெப்பக்குளத்துக்கு விடிவு காலம் – தொடங்கியது தூர்வாரும் பணி
    Next Article 1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி
    Editor web1
    • Website

    Related Posts

    மோசடி வழக்கு; திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரனிடம் 4 மணி நேரம் விசாரணை – தன் மீது பொய்க் குற்றச்சாட்டு என பேட்டி

    July 1, 2026

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    July 1, 2026

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மோசடி வழக்கு; திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரனிடம் 4 மணி நேரம் விசாரணை – தன் மீது பொய்க் குற்றச்சாட்டு என பேட்டி

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.