சபாநாயகருக்கு எதிராக திமுக தீர்மானம் கொண்டுவரும் போது தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என தவெக எம்.எல்.ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் பேரத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் திமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுமாறு கூறி பேரம் பேசியதாக காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்துள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறியதாவது…
செந்தில்பாலாஜி, ஸ்டாலின் மற்றும் உதயநிதி உத்தரவின் பேரில் 50 கோடி ரூபாய் வரை தருவதாக கூறி எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசி உள்ளனர்.
குதிரை பேரத்தை 40 நாளாக எங்கள் உறுப்பினர்களிடம் திமுகவினர் நடத்தி வருகின்றனர்.
இதற்காக யார் யாரிடம் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என பேசி உள்ளனர்.
இத்தகைய கேவலமான, கீழ்ததரமான வேலையை ஸ்டாலினும் உதயநிதியும் செய்து வருகின்றனர்..
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப் போவதாகவும் அதை ஆதரிக்க வேண்டும் என்றும் கூறி குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியும் இப்போது திமுக வினரோடு சேர்ந்துள்ளார்
இதுகுறித்து பல எம்எல்ஏக்கள் கட்சித் தலைமையிடம் புகார் அளித்து உள்ளனர்
தவெக எம்எல்ஏ க்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுவோர் மீது சட்டப் பூர்வமாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இபிஎஸ் – ஐ முதலமைச்சர் ஆக்க அனைத்து கூட்டணி தலைவர்களுடனும் ஸ்டாலின் பேசி உள்ளார் . இதை விட கேவலம் வேறு உண்டா..?
எங்கள் எமஎல்ஏ-க்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது . ஓட்டுக்கு பணம் கொடுத்து தொகுதிக்கு 70 கோடி செலவு செய்து நாங்கள் ஜெயிக்கவில்லை. 2..3 லட்சம் ரூ. மட்டுமே செலவிட்டு எங்கள் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
நாளை தேர்தல் வந்தாலும் நாங்கள் தான் ஜெயிப்போம்.
திமுகவில் ஒரு முதலமைச்சர் வேட்பாளரே தோற்றுப் போய் விட்டார் . ஸ்டாலின் அரசியலை விட்டு விலகி விட வேண்டும்.
குதிரை பேரத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டவுடன் அதை சமாளிக்க ஆளுநருக்கு எங்களை குற்றம்சாட்டி கடிதம் எழுதி கொண்டிருக்கின்றனர்
நாங்கள் யாரிடமும் குதிரை பேரம் பேசவில்லை . 120 உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. திமுகவினர் மக்கள் தீர்ப்பை ஏற்க வேண்டும்.
அதிமுகவில் இனி யாருக்கும் அரசியல் எதிர்காலம் இல்லை. நாங்கள் யாரிடமும் பேசி எங்கள் கட்சியில் இணைக்க வில்லை
உதயநிதி அரசியலில் இனி தேற மாட்டார் என ஸ்டாலினுக்கு தெரியும் . கடந்த ஒருவாரமாக உதயநிதி துபாயில்தான் உள்ளார்.
திராவிட மாடல் என்றுதான் தனது ஆட்சியை ஸ்டாலிடன் கூறினார் , ஸ்டாலின் மாடல் என கூறும் தைரியம் அவருக்கு எப்போதும் இருந்தது இல்லை
பலரிடமும் திமுகவினர் பேசி இருக்கலாம் , ஆதாரத்துடன் ஒரு எம்எல்ஏ காவல்துறையில் புகார் அளித்துள்ளார்
இதற்குமேல் கேவலமான விசயத்தை திமுகவால் செய்ய முடியாது.
வைகோ எங்களுடன் சேர்ந்து பயணிக்க ஆர்வமாக உள்ளேன் என்றுதான் கூறினார்
அதிமுகவில் இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு , வருத்தத்தில் தங்கள் பதிவியை ராஜினாமா செய்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து விலகியவர்களுக்கு உடனடியாக எப்படி ஐடி கார்ட் கிடைக்கும் என கேட்கிறீர்கள். ஆன்லைனில் பதிவு செய்தால் எங்கள் கட்சியில் புகைப்படத்துடன் ஐடி கார்ட் உடனே வழங்கப்படும் , இது வழக்கமானதுதான்
நாங்கள் யாரிடமும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய சொல்லவில்லை. மதிமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என ஒருபோதும் முதலமைச்சர் கூறி இருக்க மாட்டார்.
விஜயபாஸ்கர் மீது ஊழல் வழக்குகள் இருப்பதாக கேட்கிறீர்கள், தனி நபராக அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு எங்கள் கட்சிக்கு வருகின்றார் , இதுபோல நாள்தோறும் பலர் வருகின்றனர்.
அவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் இருந்தால் எந்த விதத்திலும் சட்டப் பூர்வமாக , அவர்களுக்கு நாங்கள் உதவ மாட்டோம்.
சட்டப்பூர்வமாகத்தான் அவர்கள் தங்கள் பழைய வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
