Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அனுமதி முடிந்தும் செயல்பட்ட கல்குவாரி; கள்ளத்தனமாக கற்களை ஏற்றிச் சென்ற 5 லாரிகள் பறிமுதல்!
    தமிழ்நாடு

    அனுமதி முடிந்தும் செயல்பட்ட கல்குவாரி; கள்ளத்தனமாக கற்களை ஏற்றிச் சென்ற 5 லாரிகள் பறிமுதல்!

    Editor web1By Editor web1May 24, 2026Updated:May 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 05 24 06h59m43s512
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு அனுமதி காலம் முடிவடைந்தும் கள்ளத்தனமாகச் செயல்பட்டு வந்த கல்குவாரியில், கனிம வளத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு 5 லாரிகளைப் பறிமுதல் செய்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற கல்குவாரிகள் மூலம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கற்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடமங்கலம் பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி காலாவதியான கல்குவாரி ஒன்று, அரசுக்குத் தெரியாமல் தொடர்ந்து இயங்கி வருவதாகக் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    இந்தக் குவாரியில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கனிம வளங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

    vlcsnap 2026 05 24 07h00m26s845

    இந்த தகவலின் அடிப்படையில், கனிம வளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றி பாறை கற்களை ஏற்றிக்கொண்டு வந்த 5 லாரிகளைக் கண்ட அதிகாரிகள், அவற்றை மடக்கிப் பிடித்தனர். அதிகாரிகளைக் கண்டதும் லாரி ஓட்டுநர்கள் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.

    இதனைத் தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினரின் உதவியுடன் அந்த 5 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது, தப்பி ஓடிய லாரி ஓட்டுநர்கள் மற்றும் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட கல்குவாரி உரிமையாளர்களைப் பிடிப்பதற்காகப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article3 நாட்களில் 1,263 ரவுடிகள், போதைப்பொருள் குற்றவாளிகள் கைது!- தமிழக காவல்துறை அதிரடி!
    Next Article இன்றும், நாளையும் 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கான “மஞ்சள்” எச்சரிக்கை!
    Editor web1
    • Website

    Related Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.