Close Menu
    What's Hot

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவல்துறையில் அதிரடி மாற்றம்!- “தினமும் 2 மணி நேரம் அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை”
    Featured

    காவல்துறையில் அதிரடி மாற்றம்!- “தினமும் 2 மணி நேரம் அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை”

    Editor web1By Editor web1May 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் விஜய்யின் உத்தரவையடுத்து, காவல் அதிகாரிகளுடன் தினமும் 2 மணி நேரம் டிஜிபி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை உறுதி செய்யவும், குற்றச் செயல்களை தொடக்கத்திலேயே கிள்ளியெறியவும், தமிழகக் காவல் துறையில் மிக முக்கிய மாற்றங்களை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தினசரி 2 மணி நேரம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, கள நிலவரங்களைக் கேட்டறிய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் அண்மைக்காலமாக ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார். காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    டிஜிபி தலைமையிலான உயரதிகாரிகள், தினசரி 2 மணி நேரம் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அதில் மாவட்ட வாரியான குற்றச்சம்பவங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காவல் நிலையங்களின் செயல்பாடு, நிலுவையில் உள்ள வழக்குகள், மற்றும் சட்டவிரோதச் செயல்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் உடனுக்குடன் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வதையும், புகார்கள் மீது துரிதமான நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

    ரவுடிகள், கஞ்சா விற்பனையாளர்கள் மற்றும் சமூக விரோத சக்திகள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறையின் மூலம் காவல் துறைக்கும், அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்குத் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரே நாளில் 51,000 பேருக்கு அரசுப் பணி- பிரதமர் மோடி அதிரடி!
    Next Article அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை!
    Editor web1
    • Website

    Related Posts

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    July 17, 2026

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    July 17, 2026

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

    மாணவர்களுக்கான கல்விக் கடனை உயர்த்த முடிவு!. ரூ.3,000 கோடி இலக்கு!. அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!

    திருச்சி ; அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

    கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கு..! தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

    கோவை: களேபரமான மாநகராட்சி மாமன்றக் கூட்டம்..!! மோதிக்கொண்ட காங்., – திமுக கவுன்சிலர்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.