Close Menu
    What's Hot

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!. சுற்றுலா பயணிகள் 8 பேர் பலி!
    Featured

    500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!. சுற்றுலா பயணிகள் 8 பேர் பலி!

    Editor web3By Editor web3May 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    himachal accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 500 அடி ஆழப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பெங்களூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர், இமாச்சலப் பிரதேசத்தின் அழகிய பனிமலைகளைக் கண்டு ரசிப்பதற்காகச் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா  மாவட்டத்தில் உள்ள மலைப் பாதையில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், மலைப் பாதையோரம் இருந்த சுமார் 500 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகீழாக உருண்டு விழுந்தது.

    இந்தக் கோர விபத்தில் வாகனத்தில் பயணித்த 8 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு சிறு குழந்தைகளும் அடங்குவர்.

    விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், காவல்துறையினரும் மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பள்ளம் மிகவும் ஆழமாக இருந்ததால், நீண்ட போராட்டத்திற்குப் பிறகே உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    கோடை விடுமுறையைக் கொண்டாடவும், பனிமலையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடனும் துள்ளிக் குதித்துச் சென்றவர்கள்,  சடலமாக திரும்பிய சம்பவம் அவர்களது சொந்த ஊரில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து இமாச்சல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உயிரிழந்தவர்கள், பெங்களூருவைச் சேர்ந்த அரவிந்த் சந்திரகர், அவரது மனைவி பிராச்சி, மகன்கள் தர்ஷ் மற்றும் அக்ஷத், கர்நாடகாவைச் சேர்ந்த பி.ஜி. கார்த்திகேயன், அவரது மனைவி மணிமாலா மற்றும் மகன் நந்தன், மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவிலிருந்து பானிகெட்டைச் சேர்ந்த வாடகைக்கார் ஓட்டுநர் விஸ்வாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிரிணாமுல் காங்., எம்.பி. மீது தாக்குதல்!. மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறை!
    Next Article தீண்டாமையால் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து… அமைச்சர் வன்னி அரசு அதிரடி உத்தரவு!
    Editor web3
    • Website

    Related Posts

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘கருப்பு’ படத்தின் மெகா வெற்றி: ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளருக்கு கார் பரிசளித்த சூர்யா!

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!. தூத்துக்குடியில் பரபரப்பு!

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    நாளை (ஜூன் 1) வெளியாகிறது மாரி செல்வராஜின் 6-வது பட அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.