Close Menu
    What's Hot

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தீண்டாமையால் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து… அமைச்சர் வன்னி அரசு அதிரடி உத்தரவு!
    தமிழ்நாடு

    தீண்டாமையால் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து… அமைச்சர் வன்னி அரசு அதிரடி உத்தரவு!

    Editor web1By Editor web1May 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Coimbatore bus
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை தொண்டாமுத்தூர் அருகே அரசு பேருந்தில் அரங்கேறிய சாதிய தீண்டாமை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக சமூக நீதி மற்றும் மனிதநேயத்துறை அமைச்சர் வன்னி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் உள்ள அண்ணாநகர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் தங்களது அன்றாடப் பயணங்களுக்கு 21-ஆம் எண் கொண்ட அரசு நகரப் பேருந்தையே முழுமையாக நம்பியுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த சில தினங்களாக அண்ணாநகர் பகுதிக்குள் பேருந்தை முறையாக இயக்காமல் ஓட்டுநரும், நடத்துநரும் புறக்கணிப்பதாகவும், பட்டியலின மக்களை பேருந்தில் ஏற்றுவதில் சாதிய தீண்டாமை காட்டப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    அமைச்சர் வன்னி அரசு காட்டம்

    இந்த விவகாரம் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அவர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

    “மக்களாட்சியில் சாதியின் பெயரால் அரசுப் பேருந்துகளில் சாமானிய மக்களைப் புறக்கணிப்பதை எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ள முடியாது” என்று அமைச்சர் வன்னி அரசு கடுமையாக எச்சரித்தார்.

    vanni arasu

    மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

    இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமாருக்கு அமைச்சர் பிறப்பித்துள்ள அதிகாரப்பூர்வ உத்தரவில், “தொண்டாமுத்தூர் கெம்பனூர் அடுத்த அண்ணாநகர் பகுதிக்கு, 21-ஆம் எண் கொண்ட அரசு நகரப் பேருந்து எவ்வித தங்குதடையுமின்றி உடனடியாக இயக்கப்பட வேண்டும்.

    பேருந்து நிறுத்தங்களில் வரும் அனைத்து மக்களையும் எவ்வித பாகுபாடுமின்றி சமமாக நடத்த வேண்டும்.

    இனிவரும் காலங்களில் இப்பகுதியில் எவ்வித சாதிய தீண்டாமை புகார்களும் எழாத வண்ணம் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறையும் இணைந்து தீவிரமாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!. சுற்றுலா பயணிகள் 8 பேர் பலி!
    Next Article சிப்காட்டில் பற்றி எரிந்த தொழிற்சாலை கழிவுகள் – தீயை அணைப்பதில் வீரர்கள் மும்முரம்
    Editor web1
    • Website

    Related Posts

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    May 31, 2026

    ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!

    May 31, 2026

    கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    ஐபிஎல்-லில் சச்சின் முன்வைக்கும் 2 புதிய அதிரடி மாற்றங்கள்!

    “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

    ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!

    கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சோழர் கடல் ராஜ்ஜியம் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

    May 31, 2026

    “கடும் வெயில்; கவனமா இருங்க “- மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

    May 31, 2026

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.