Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தீண்டாமையால் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து… அமைச்சர் வன்னி அரசு அதிரடி உத்தரவு!
    தமிழ்நாடு

    தீண்டாமையால் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து… அமைச்சர் வன்னி அரசு அதிரடி உத்தரவு!

    Editor web1By Editor web1May 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Coimbatore bus
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை தொண்டாமுத்தூர் அருகே அரசு பேருந்தில் அரங்கேறிய சாதிய தீண்டாமை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக சமூக நீதி மற்றும் மனிதநேயத்துறை அமைச்சர் வன்னி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் உள்ள அண்ணாநகர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் தங்களது அன்றாடப் பயணங்களுக்கு 21-ஆம் எண் கொண்ட அரசு நகரப் பேருந்தையே முழுமையாக நம்பியுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த சில தினங்களாக அண்ணாநகர் பகுதிக்குள் பேருந்தை முறையாக இயக்காமல் ஓட்டுநரும், நடத்துநரும் புறக்கணிப்பதாகவும், பட்டியலின மக்களை பேருந்தில் ஏற்றுவதில் சாதிய தீண்டாமை காட்டப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    அமைச்சர் வன்னி அரசு காட்டம்

    இந்த விவகாரம் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அவர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

    “மக்களாட்சியில் சாதியின் பெயரால் அரசுப் பேருந்துகளில் சாமானிய மக்களைப் புறக்கணிப்பதை எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ள முடியாது” என்று அமைச்சர் வன்னி அரசு கடுமையாக எச்சரித்தார்.

    vanni arasu

    மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

    இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமாருக்கு அமைச்சர் பிறப்பித்துள்ள அதிகாரப்பூர்வ உத்தரவில், “தொண்டாமுத்தூர் கெம்பனூர் அடுத்த அண்ணாநகர் பகுதிக்கு, 21-ஆம் எண் கொண்ட அரசு நகரப் பேருந்து எவ்வித தங்குதடையுமின்றி உடனடியாக இயக்கப்பட வேண்டும்.

    பேருந்து நிறுத்தங்களில் வரும் அனைத்து மக்களையும் எவ்வித பாகுபாடுமின்றி சமமாக நடத்த வேண்டும்.

    இனிவரும் காலங்களில் இப்பகுதியில் எவ்வித சாதிய தீண்டாமை புகார்களும் எழாத வண்ணம் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறையும் இணைந்து தீவிரமாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!. சுற்றுலா பயணிகள் 8 பேர் பலி!
    Next Article சிப்காட்டில் பற்றி எரிந்த தொழிற்சாலை கழிவுகள் – தீயை அணைப்பதில் வீரர்கள் மும்முரம்
    Editor web1
    • Website

    Related Posts

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    July 21, 2026

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    July 21, 2026

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.