Close Menu
    What's Hot

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»காங்கிரசின் பினாமிதான் தவெக – ஆதரவளிக்க பல கோடி கைமாறியது – நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி குண்டு
    Featured

    காங்கிரசின் பினாமிதான் தவெக – ஆதரவளிக்க பல கோடி கைமாறியது – நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி குண்டு

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கட்சியின் பினாமியாகச் செயல்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பகீர் குற்றாச்சாட்டைக் கூறியுள்ளார்.

    நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் உலகின் மிகப்பெரிய அரசியல் இயக்கத்தின் தலைவராக நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். பல நாடுகளுக்கு சென்று இந்தியாவிற்கு தேவையானவற்றை பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

    010 nainar b

    போர் சூழலிலும் குண்டு மழை பொழிந்து வரும் நிலையிலும் இந்தியாவிற்கு தேவையான பொருட்கள் தங்கு தடை இன்றி கிடைத்து வருகிறது என்றார்.

    அண்ணாமலை தொடர்பான கேள்விக்கு, அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து அவரும் யாரிடமும் சொல்லவில்லை. நாங்களும் அவரிடம் பேசவில்லை.

    அவர் ராஜினாமா செய்வதற்கான எந்த கடிதமும் இருக்கவில்லை. எங்களிடமும் கிடைக்கவில்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றார்.

    010 nainar c

    தொடர்ந்து பேசியவர்,  முதல்வர் சிறுபான்மை அரசு என தொடர்ந்து சொல்லி வருகிறார். சிறுபான்மையினருக்கான அரசா சிறுபான்மையினர் அரசா என்பதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும்.

    திமுக ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருந்து வருகிறது, கொலை, கற்பழிப்பு, பாலியல் குற்றம், ஊழல் என அனைத்தும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

    டாஸ்மாக்கில் மாமுல் வாங்க தவெகவினர் ஆரம்பித்து விட்டார்கள். பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவதாகப் பேசி வாக்குகளை பெற்றுக்கொண்டு வாக்களித்த மக்களை அவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். இந்த அரசு வாக்களித்த மக்களுக்கு என்ன சொல்லப் போகிறது என்று தெரியவில்லை.

    எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியின் குறைகளைச் சொல்ல உரிமை உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியின் கருத்து தொடர்பாக முதலமைச்சர் அசிங்கமாக மேடைகளில் பேசி வருகிறார். முதலமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.

    டெல்லி சென்று பாஜக அகில இந்திய தலைவரை பார்த்ததாகவும், தான் மத்திய அமைச்சர் ஆவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறிய நயினார் நாகேந்திரன், விஜய் முதல்வர் ஆனது குறித்து அவருக்கே ஆச்சரியமாக உள்ளது. விஜய் இன்னும் அவரது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை என்றார்.

    விஜய் பொறுப்பேற்ற 20 நாளில் மின்வாரிய ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது. இன்னும் மீதமுள்ள நாட்களில் என்னவெல்லாம் காணாமல் போகுமோ என்று அச்சம் எழுந்துள்ளது.

    010 nainar a

    காங்கிரஸ் கட்சியின் பினாமியாக தமிழக வெற்றி கழகம் செயல்படுவதாக பகீர் குண்டைப் போட்டவர், இப்போது உள்ள சூழலில் தமிழகத்தில் உருவாகியுள்ள இடைத்தேர்தல் தேவையில்லாதது. தேர்தல் முடிந்து 20 நாளில் இடைத்தேர்தல் என்பது ஏற்க முடியாத ஒன்று.

    தமிழகத்தில் குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பதற்கு பல கோடி ரூபாய் கை மாறி உள்ளது என தெரிவித்தார்.

    திமுக உடன் பாஜக உறவு வைக்க முயற்சிப்பதாக எழும் கேள்வியே அவசியமில்லாத ஒன்று எனக் கூறியவர், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை முடிவெடுக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமரபுபடிதான் செயல்பட்டோம்; வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள்!. மேயர் பிரியா விளக்கம்!
    Next Article முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து!. 12 பேர் உயிரிழப்பு; 9 பேர் கவலைக்கிடம்!
    Editor TN Talks

    Related Posts

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    June 4, 2026

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    June 4, 2026

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    100% தோல்வி; துணைக் கேப்டன் பதவி பறிப்பு!. ரிஷப் பண்ட்டிடம் கம்பீர் பேசிய ரகசியம்!

    “ஹார்டு டிஸ்க்குகள் மாயம்… ஊழல்வாதிகளைக் காக்கிறதா பேரசக்தி?” –இபிஎஸ் கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.