Close Menu
    What's Hot

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அம்பேத்கர் சிலை அகற்றம்… திருமாவளவன் நிகழ்ச்சியில் கடைசி நிமிடத்தில் பரபரப்பு!
    அரசியல்

    அம்பேத்கர் சிலை அகற்றம்… திருமாவளவன் நிகழ்ச்சியில் கடைசி நிமிடத்தில் பரபரப்பு!

    Editor web2By Editor web2June 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 06 06 18h26m24s401
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விழுப்புரத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட 6 அடி உயர அண்ணல் அம்பேத்கர் சிலையைக் காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் நள்ளிரவில் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்திய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன் மற்றும் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினரும், சமூகநீதி அமைச்சருமான வன்னி அரசு ஆகியோர் நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். மாவட்ட எல்லை முதற்கொண்டே அவர்களுக்கு விசிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் பழைய மருத்துவமனை எதிரே உள்ள ஜி.ஆர்.பி. தெருவின் முனையில், விசிக மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் காசிநாதன் ஏற்பாட்டில் 6 அடி உயரமுள்ள புதிய அம்பேத்கர் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது.

    நேற்று இரவு 9 மணியளவில் விசிக தலைவர் திருமாவளவன் அந்தச் சிலையைத் திறந்து வைப்பதற்காக அங்கே வருகை தந்தார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர், இந்தச் சிலை வைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடமோ அல்லது வருவாய்த் துறையிடமோ உரிய முன் அனுமதி பெறப்படவில்லை என்பதைத் தலைவர்களிடம் எடுத்துக் கூறினர்.

    vlcsnap 2026 06 06 18h27m31s079

    சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்க விரும்பிய திருமாவளவன் மற்றும் அமைச்சர் வன்னி அரசு ஆகியோர், காவல்துறையின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு சிலையைத் திறக்காமல் தவிர்த்தனர். அங்கு கூடியிருந்த விசிக நிர்வாகிகளின் மாலை வரவேற்பை மட்டும் பெற்றுக்கொண்டு, அவர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டனர். தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் அருகே ஏற்கனவே முறையாக நிறுவப்பட்டிருந்த மற்றொரு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டுச் சென்றனர்.

    தலைவர்கள் சென்றதைத் தொடர்ந்து, அனுமதியின்றி வைக்கப்பட்ட அந்தச் சிலையை அகற்ற வருவாய்த் துறையினர் முடிவெடுத்தனர். அதன்படி, இன்று அதிகாலை 3 மணியளவில் ஏடிஎஸ்பி இளமுருகன், டிஎஸ்பிக்கள் ரூபன்குமார், கந்தசாமி ஆகியோர் தலைமையிலான பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கிரேன் உதவியோடு அம்பேத்கர் சிலை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் அச்சிலை பாதுகாப்பாகத் தாலுகா அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

    vlcsnap 2026 06 06 18h26m46s266

    விவரமறிந்து வந்த விசிக நிர்வாகிகளிடம் பேசிய வருவாய்த் துறை அதிகாரிகள், உரிய அரசு அனுமதி பெற்ற பிறகு இதே இடத்தில் முறைப்படி சிலையை மீண்டும் நிறுவிக் கொள்ளலாம் எனத் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட விசிகவினர் அமைதியாகக் கலைந்து சென்றனர். தன் உயிரினும் மேலான தலைவர் கைகளால் திறக்கப்பட வேண்டிய சிலை, கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அகற்றப்பட்டதால் விசிக தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆதங்கமும், அப்பகுதியில் நேற்று இரவு முதல் ஒருவித பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர் ரவி மோகன்!
    Next Article அண்ணாமலையின் வருகை… எந்தெந்த கட்சிகளுக்கு சேதாரம்?
    Editor web2
    • Website

    Related Posts

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    June 8, 2026

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    June 8, 2026

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.