Close Menu
    What's Hot

    குழந்தைகளிடம் வேகமாக பரவும் ஷிகெல்லா வைரஸ்!. பரவும் விதம், அறிகுறிகள், சிகிச்சை,  தடுப்பு முறைகள் இதோ!

    4 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தது ஏன்? 7 நாளில் விளக்கமளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    ‘நான் முதல்வன் திட்டம்’ பற்றி யோசித்து முடிவு செய்யப்படும்..!! அமைச்சர் முகமது பர்வேஸ் தகவல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சரக்கு வாகனம் மோதி கோர விபத்து!. பள்ளிக்கு சென்ற தாத்தா, பேரக்குழந்தைகள் துடிதுடித்து மரணம்!
    தமிழ்நாடு

    சரக்கு வாகனம் மோதி கோர விபத்து!. பள்ளிக்கு சென்ற தாத்தா, பேரக்குழந்தைகள் துடிதுடித்து மரணம்!

    Editor web3By Editor web3June 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ranipet accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றபோது சரக்கு வாகனம் மோதியதில், தாத்தாவும் அவரது இரண்டு பேரக்குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (60). தையல் தொழிலாளியான இவர், இன்று காலை தனது மகன் மற்றும் மகளின் குழந்தைகளான அஜய் (9), குணஸ்ரீ (7), அஸ்வந்த் (4) ஆகிய மூன்று பேரப்பிள்ளைகளையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வழக்கம்போல அருகில் உள்ள தனியார் பள்ளிக்குக் கிளம்பியுள்ளார்.

    இவர்கள் சித்தாஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து வேலூர் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று, எதிர்பாராதவிதமாக வேலுவின் இருசக்கர வாகனத்தின் பின்புறம் பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட தாத்தா வேலு, பேத்தி குணஸ்ரீ மற்றும் 4 வயது பேரன் அஸ்வந்த் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

    மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு பேரன் அஜய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவேரிப்பாக்கம் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    3 dead accident ranipet
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக தோல்வி: ஸ்டாலினை அதிரவைத்த ஆய்வுக்குழுவின் 4 காரணங்கள்!
    Next Article மறுக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி… திறக்கப்படாத மேட்டூர் அணை… விவசாயிகளை வீதிக்கு தள்ளிய விடியா அரசு!. இபிஎஸ் அட்டாக்!
    Editor web3
    • Website

    Related Posts

    4 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தது ஏன்? 7 நாளில் விளக்கமளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    June 12, 2026

    ‘நான் முதல்வன் திட்டம்’ பற்றி யோசித்து முடிவு செய்யப்படும்..!! அமைச்சர் முகமது பர்வேஸ் தகவல்..!!

    June 12, 2026

    மூன்று துறைகள் இணைந்து நில ஆவணங்கள் கணினிமயமாக்கம்: அமைச்சர்கள் ஆலோசனை..!!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குழந்தைகளிடம் வேகமாக பரவும் ஷிகெல்லா வைரஸ்!. பரவும் விதம், அறிகுறிகள், சிகிச்சை,  தடுப்பு முறைகள் இதோ!

    4 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தது ஏன்? 7 நாளில் விளக்கமளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    ‘நான் முதல்வன் திட்டம்’ பற்றி யோசித்து முடிவு செய்யப்படும்..!! அமைச்சர் முகமது பர்வேஸ் தகவல்..!!

    மூன்று துறைகள் இணைந்து நில ஆவணங்கள் கணினிமயமாக்கம்: அமைச்சர்கள் ஆலோசனை..!!

    கரூர் விவகாரம்!. தவெக ஆட்சி அமைந்த பின் வேகம் எடுக்கும் சிபிஐ விசாரணை!. போலீசார் ஆஜர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.