Close Menu
    What's Hot

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி;  எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்
    Featured

    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி;  எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்

    Editor TN TalksBy Editor TN TalksJune 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 vijayabaskar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ, சி.விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது பணி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

    சட்டப்பேரவையில் தவெக ஆட்சிக்கு சி.விஜயபாஸ்கர் ஆதரவளித்ததை தொடர்ந்து அவர் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி அறிவித்தார். மேலும் கட்சி தாவல் சட்டப்படி தனக்கு எதிராக இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கல் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தார்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருந்த எம்.எல்.ஏக்களில் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தங்கள். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

    இதனைத் தொடர்ந்து எடப்பாடிக்கு எதிராக இருந்த வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தனர்.

    இவர்களில் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ சி.வி.சண்முகம், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடியை சந்திக்காததோடு, அமைதியாக இருந்து வந்தனர். இதனால் இவர்கள் அதிமுகவிலேயே தொடர்வார்களா அல்லது வெளியேறுவார்களா என சந்தேகம் நிலவி வந்தது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தனது சமூக வலைத்தளத்தில் சி.விஜயபாஸ்கர், அதிமுக தலைமைக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டு வந்தார்.  

    தலைமை என்பது

    அதிகாரமோ, ஆணவமோ அல்ல…

    ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’

    உழைக்கும் தொண்டர்களின் மனதை

    வெல்ல முடியாத தலைமை,

    மக்களின் மனதை எப்படி வெல்லும்?

    உணர்வுகளை மதிக்காத இடத்தில்

    உண்மையான பயணம் சாத்தியமா?

    எனப் பதிவிட்டிருந்தார்.

    இதன் மூலம் அவர் விரைவில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதோடு, அதிமுகவில் இருந்தும் விலகுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில்,

    இன்று பிற்பகலில் சி.விஜயபாஸ்கர் தனது அதிமுக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டப்பேரவைக்கு சென்ற அவர், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தனது விலகல் கடிதத்தை அளித்தார். அவரது கடிதம் முறையாக இருந்ததாகக் கூறி சபாநாயகரும், அதனை ஏற்றுக் கொண்டார்.

    இதனால் மூலம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபின் பதவி விலகிய அதிமுக  எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 42ஆக குறைந்துள்ளது.

    சி.விஜயபாஸ்கரும், மற்றவர்களைப் போல் தவெகவில் இணைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    2001ம் ஆண்டு முதன்முறையாக புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார் விஜயபாஸ்கர்.  அதன் பின்னர் 2006 தேர்தல் தவிர்த்து அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வரை விராலிமலை தொகுதியில் தொடர்ந்து போட்டிய்ட்டு வெற்றி பெற்றவர் விஜயபாஸ்கர்.2013-இல் முதன்முறை அமைச்சரானவர், தொடர்ந்து 2016இலும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.

    சி.விஜபாஸ்கர் ராஜினாமா மூலம் விராலிமலை உள்பட 6 தொகுதிகள் தமிழ்நாட்டில் காலியாக உள்ளன.

    AIADMK MLA Resignation Vijayabaskar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுச்சேரி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு – காங்கிரஸ் அறிவிப்பு
    Next Article பயிர்க்கடன் தள்ளுபடி; முரணாகச் செயல்படுகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    June 16, 2026

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    June 16, 2026

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    பயிர்க்கடன் தள்ளுபடி; முரணாகச் செயல்படுகிறது தவெக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி;  எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.