கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் கல்லாடி பகுதியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அங்கு மாயமாகித் தேடப்பட்டு வந்த இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விக்ரம் ரானா என்பவரது உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இந்த நிலச்சரிவில் சிக்கி மாயமானதாகப் புகாரளிக்கப்பட்ட அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதால், கடந்த சில நாட்களாகத் தீவிரமாக நடைபெற்று வந்த மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட விக்ரம் ரானாவின் உடலை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
கல்லாடி பகுதியில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு பெரும் உயிர்ச்சேதத்தையும், பரவலான சொத்துச் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), கேரளா காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து, நிலச்சரிவு ஏற்பட்ட நாள் முதல் இரவு பகலாக இந்தத் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
