Close Menu
    What's Hot

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பள்ளியில் மத திணிப்பு?. சிறுவர்களின் டைரியில் எழுதப்பட்ட வீட்டுப்பாடம்!. பெரும் சர்ச்சை!
    Featured

    பள்ளியில் மத திணிப்பு?. சிறுவர்களின் டைரியில் எழுதப்பட்ட வீட்டுப்பாடம்!. பெரும் சர்ச்சை!

    Editor web3By Editor web3July 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Hyderabad school
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹைதராபாத், சையதாபாத் பகுதியில் இயங்கி வரும் ‘சக்சஸ்’ என்ற தனியார் பள்ளியில், இரண்டாம் வகுப்பு பயிலும் ஆறு வயது இந்து மதத்தைச் சேர்ந்த சிறுவனின் வீட்டுப்பாட டைரியில், இஸ்லாமிய மத நம்பிக்கையின் அடிப்படைப் பாடங்களான ‘கல்மா 1 மற்றும் 2’ (Kalma) மற்றும் குர்ஆனின் முதல் அத்தியாயமான ‘பாத்திஹா’ (Fatiha) ஆகியவற்றை வாசிக்குமாறு எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்ட சிறுவனின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    சிறுவனின் உறவினர் ஒருவர் இது குறித்து கூறுகையில், “பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுவனின் டைரியைச் சரிபார்த்தபோது, இந்த மத வழிபாட்டுப் பாடங்கள் வீட்டுப்பாடமாகக் கொடுக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தேன். ஒரு பள்ளியின் பொறுப்பு தரமான கல்வியை வழங்குவதுதானே தவிர, மதப் போதனைகளை திணிப்பது அல்ல,” என்று தெரிவித்துள்ளார். மேலும், முன்னதாகவே ஒருமுறை இதேபோன்ற குறிப்பு டைரியில் எழுதப்பட்டு, பின் அடிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இது ஏதோ தவறுதலாக நடந்ததாக தெரியவில்லை, திட்டமிட்டே செய்யப்படுவதாக உணர்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது குறித்து பள்ளியின் முதல்வரிடம் விளக்கம் கேட்டபோது, முதலில் இது ஒரு மத நடைமுறை என்றும், அனைத்து மாணவர்களும் கட்டாயம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டதாக அந்த உறவினர் தெரிவித்தார். பின்னர், அது தவறுதலாக எழுதிவிட்டதாக ஆசிரியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடான விளக்கங்கள் தங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.

    மற்ற மாணவர்களின் டைரிகளிலும் இதுபோன்ற குறிப்புகள் எழுதப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை இது விருப்பப்பாடம் என்றால், அந்தப் பாடத்தை எடுத்த மாணவர்களுக்கு தனியாகக் கற்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்தவித முன் ஆலோசனையும் இன்றி அனைவர் மீதும் திணிக்கப்படுகிறது,” என்று கவலை தெரிவித்த குடும்பத்தினர், இதை ஒருவிதமான ‘மறைமுக மூளைச்சலவை’ என்று விமர்சித்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் கல்வித்துறை தலையிட்டு, சம்பந்தப்பட்ட பள்ளியின் செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவனின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

    homework Hyderabad school read kalma student
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை… 15 மாவட்டங்களுக்கு அலர்ட்!
    Next Article இஸ்ரோவில் ஒரே ஆண்டில் 120 விஞ்ஞானிகள் விலகல்… புதிய விதிகளே காரணமா?
    Editor web3
    • Website

    Related Posts

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    July 16, 2026

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    July 16, 2026

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு விளம்பரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.