டெல்லியில் நடைபெற்ற பொதுப் போராட்டம் நிறைவடைந்த பிறகு, போராட்டத் தளத்தை சுத்தப்படுத்தும் சிறப்பு தூய்மை இயக்கத்தை Maid In India நிறுவனம் மேற்கொண்டது.
மஞ்சள் நிற டி-ஷர்ட்கள் அணிந்து, கையுறைகள், முகக்கவசங்கள், துடைப்பங்கள் மற்றும் குப்பைப் பைகளை எடுத்துக்கொண்டு வந்த நிறுவன ஊழியர்கள், சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள், ஒருமுறை பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளை சேகரித்தனர்.
சில மணி நேரங்களிலேயே ஏராளமான பெரிய குப்பைப் பைகளை நிரப்பும் அளவுக்கு கழிவுகள் அகற்றப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு அங்கு இருந்த பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
Maid In India நிறுவனத்தின் இணை நிறுவனர் சன்ஸ்கர் மாலிக் கூறுகையில், “தூய்மை என்பது ஒருவரின் பொறுப்பு அல்ல; அனைவரின் பொறுப்பு. கொண்டாட்டமோ, பொதுக் கூட்டமோ, எந்த நிகழ்வாக இருந்தாலும் நமது வீடுகளைப் போலவே பொதுஇடங்களையும் மதிக்க வேண்டும். இந்த முயற்சியின் மூலம் நாட்டிற்கு சிறிய பங்களிப்பை வழங்க விரும்பினோம்” என்றார்.
மற்றொரு இணை நிறுவனர் சமய் மாலிக், “வீட்டு சேவைகளை வழங்கும் நிறுவனமாக மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். வாடிக்கையாளர்கள், சமூகங்கள் மற்றும் பொதுஇடங்கள் என எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க விரும்புகிறோம். இந்த தூய்மை இயக்கம் அதற்கான ஒரு சிறிய முயற்சியாகும்” என்று தெரிவித்தார்.
தொழில்நுட்பத்தின் மூலம் வீட்டு வேலை செய்பவர்களை பயிற்சி அளித்து, சான்றளிக்கப்பட்ட சேவைகளை வழங்கும் Maid In India நிறுவனம், சமூகப் பொறுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான குடிமை உணர்வை ஊக்குவிக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
