Close Menu
    What's Hot

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!
    தமிழ்நாடு

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    Editor web2By Editor web2July 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Madras High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு விஸ்வேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 213 ஏக்கர் நிலத்தை தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை தனிநபர்களின் பெயரில் பதிவு செய்ய முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறி, கோயில் செயல் அலுவலர் ஏற்கனவே திருப்பூர் சார் பதிவாளருக்கு கடிதம் அனுப்பி, எந்தவித பத்திரப்பதிவும் மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார்.

    இந்தக் கடிதத்தை எதிர்த்து ஏ.ஆர். சண்முகசுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கோயில் செயல் அலுவலர் அனுப்பியிருந்த கடிதத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    விசாரணையின் முடிவில், கோயில் செயல் அலுவலர் திருப்பூர் சார் பதிவாளருக்கு அனுப்பியிருந்த கடிதம் சட்டப்பூர்வமானது என்றும், கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், விஸ்வேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 213 ஏக்கர் நிலம் தொடர்பாக எந்தவித பதிவும் மேற்கொள்ளக் கூடாது என சார் பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உயர் நீதிமன்றத்தி இந்தத் தீர்ப்பு மூலம், கோயிலுக்கு சொந்தமான 213 ஏக்கர் நிலம் தனிநபர் கைகளில் செல்வதில் இருந்து தப்பி உள்ளது.

    MadrasHighCourt tamilnadu TempleLand tiruppur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்
    Next Article மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”
    Editor web2
    • Website

    Related Posts

    வந்தே மாதர மசோதா மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணிக்க முயற்சியா? கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

    July 29, 2026

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    July 29, 2026

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.