Close Menu
    What's Hot

    கன்னியாகுமரி : இருசக்கர வாகனம் மீது மோதிய மினி டெம்போ..! இருவர் உயிரிழப்பு..!

    மேகதாது; ஒன்றிய அமைச்சரின் பேச்சு சட்டத்திற்கு புறம்பானது – சௌமியா அன்புமணி

    காமன்வெல்த் 2026!. ஜூடோவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை யாமினி மௌரியா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இந்தியாவில் முதல்முறை!. தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம்!
    Featured

    இந்தியாவில் முதல்முறை!. தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம்!

    Editor web3By Editor web3August 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tamilnadu census 2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் முதன்முறையாக முற்றிலும் டிஜிட்டல் மயமாக நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகள் இன்று தமிழகம் முழுவதும் தொடங்குகின்றன. ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பணியின் போது, வீடுகளின் பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.

    மாநிலம் முழுவதும் 19,000 அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பில், சுமார் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் களமிறங்குகின்றனர். தகவல்களைத் துல்லியமாகவும் வேகமாகவும் பதிவு செய்யும் வகையில், கணக்கெடுப்பாளர்கள் அனைவரும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் செயலியைப் பயன்படுத்த உள்ளனர்.

    முதல் கட்டமான இந்தப் பணியில் வீடுகளின் கட்டட அமைப்பு, குடிநீர், கழிப்பறை, மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் இணைய வசதிகள் உள்ளிட்ட 33 அடிப்படை விபரங்கள் மட்டுமே கேட்கப்படும். குடும்ப உறுப்பினர்களின் முழுமையான விவரங்கள் அடுத்தடுத்த கட்டத்தில்தான் சேகரிக்கப்படும். இதற்கிடையே, கடந்த ஜூலை 17 முதல் 31 வரை இணையவழி சுய-கணக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் se.census.gov.in அதிகாரப்பூர்வ தளம் மூலம் தங்களின் விவரங்களை ஆன்லைனிலேயே முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்தவர்கள், நேரில் வரும் கணக்கெடுப்பாளரிடம் தங்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பு எண்ணைக் காண்பித்தால் போதுமானது. விடுபட்ட மற்ற அனைத்துக் குடும்பங்களுக்கும் கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக வீடு தேடிச் சென்று விவரங்களைப் பெற்றுக்கொள்வர்.

    1948 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்ட விதிகளின்படி, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்துத் தகவல்களும் பாதுகாப்பாகவும், முற்றிலும் இரகசியமாகவும் பேணப்படும். இந்தத் தரவுகள் அனைத்தும் எதிர்கால அரசுத் திட்டங்கள், கொள்கை வகுத்தல் மற்றும் சமூக மேம்பாட்டு ஆய்வுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் கணக்கெடுப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    Digital census begins first in India tamilnadu tamilnadu cm vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎத்தனை வழக்கறிஞர்கள் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளனர்?. சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
    Next Article இது நடந்தால் அப்பாதான் முதல் சாய்ஸ்..! மனம் திறந்த முதல்வர் மகன் ஜேசன் சஞ்சய்..!
    Editor web3
    • Website

    Related Posts

    கன்னியாகுமரி : இருசக்கர வாகனம் மீது மோதிய மினி டெம்போ..! இருவர் உயிரிழப்பு..!

    August 1, 2026

    மேகதாது; ஒன்றிய அமைச்சரின் பேச்சு சட்டத்திற்கு புறம்பானது – சௌமியா அன்புமணி

    August 1, 2026

    காமன்வெல்த் 2026!. ஜூடோவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை யாமினி மௌரியா!

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கன்னியாகுமரி : இருசக்கர வாகனம் மீது மோதிய மினி டெம்போ..! இருவர் உயிரிழப்பு..!

    மேகதாது; ஒன்றிய அமைச்சரின் பேச்சு சட்டத்திற்கு புறம்பானது – சௌமியா அன்புமணி

    காமன்வெல்த் 2026!. ஜூடோவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை யாமினி மௌரியா!

    சென்னை : கோயம்பேடு காய்கறி சந்தையில் காற்கறிகள் விற்பனை மந்தம்..! விலை குறைவால் வியாபாரிகள் கவலை..!

    கேரளம் : இடுக்கியில் மீண்டும் நிலச்சரிவு..! ஒரு பெண் உயிரிழப்பு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.