Close Menu
    What's Hot

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாமியார் ஜி.பே மூலம் பணம்… கைதிகளிடம் கைவரிசை… சிக்கிய வார்டன்…
    தமிழ்நாடு

    மாமியார் ஜி.பே மூலம் பணம்… கைதிகளிடம் கைவரிசை… சிக்கிய வார்டன்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    e754e5c3219b91a8ed2ffc51219b0a5a1685900807659189 original.jpg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் இருந்து மாமியாரின் ஜி.பே மூலம் பணம் பெற்று அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்த சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சில நேரம் சிறை அதிகாரிகள் இவர்களுக்கு தேவையான போதைப் பொருட்கள் உட்பட சில பொருட்களை கைதிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு சப்ளை செய்வதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகும். சிறையில் உள்ள கைதிகள் மூலம் மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட திண்பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேப் போல, சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் சிறை உள்ளதால், சிறைக்கு சொந்தமான ஒரு அறையில் வைத்து அந்த திண்பண்டங்கள் மக்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கைதிகளுக்கு திண்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியை சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் என்பவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
    இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்குரிய பணத்தை சிறை கணக்கில் வரவு வைக்க வேண்டும். மாறாக அந்த பணம் சிறை கணக்கிற்கு சரியாக வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சுப்பிரமணியம் மீது சிறை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    அதனை உறுதிப்படுத்த மிக்சர் உள்ளிட்ட திண்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, பொருட்கள் வாங்கியதற்கு ஜி.பே மூலம் பணம் அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. அந்த ஜி.பே அக்கவுண்ட் யாருடையது என்று விசாரணை மேற்கொண்ட போது, அந்த செல்போன் எண் சிறை வார்டன் சுப்பிரமணியத்தின் மாமியார் செல்போன் எண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ரூ.1,80,000 அவருடைய ஜி.பே அக்கவுண்டுக்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிறை வார்டன் சுப்பிரமணியத்திடம் சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரும் அதனை ஒப்புக்கொள்ள, சேலம் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத், சுப்பிரமணியத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    salem tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதீப் ரங்கநாதனுக்கு வந்த புதிய சிக்கல்… ’டியூட்’ படத் தலைப்பு காப்பியா?
    Next Article ஊட்டியில் நாளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 127 வது மலர் கண்காட்சியை திறந்து வைக்கிறார்.
    Editor TN Talks

    Related Posts

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.