Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»காளியம்மன் கோவில் நில விவகாரம்: திண்டுக்கல்லில் பொதுமக்கள் கண்டனப் போராட்டம்!
    தமிழ்நாடு

    காளியம்மன் கோவில் நில விவகாரம்: திண்டுக்கல்லில் பொதுமக்கள் கண்டனப் போராட்டம்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    protest 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள பூதமரத்துப்பட்டி கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 100 ஆண்டுகள் பழமையான காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததற்குக் கண்டனம் தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

    ஆக்கிரமிப்பு விவகாரம்:

    ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கோவில் திருவிழாவின்போது, கோவில் நிலத்தில் உள்ள நாடக மேடையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வரும் 28-ஆம் தேதி வள்ளி திருமணம் நாடகம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த குணசேகரன் உட்பட 5 பேர், இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, கோவில் நாடக மேடை தங்களுக்குச் சொந்தமான இடத்தில் இருப்பதாகக் கூறி, அங்கு நாடகம் நடத்தக் கூடாது எனப் பிரச்சனை செய்து வருகின்றனர்.

    அதிகாரிகள் அலட்சியம் மற்றும் பொதுமக்கள் போராட்டம்:

    இதுகுறித்து கிராம மக்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், கடந்த 24-ஆம் தேதி திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக, இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தனிநபர் ஆக்கிரமிப்பைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    சமரசப் பேச்சுவார்த்தை:

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்சனைக் உரிய தீர்வு காணப்படும் என அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் சரவணனை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.

    இந்தச் சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    protest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாநிலங்களவை எம்.பி. தேர்வு எப்படி நடக்கும்.?
    Next Article சமூக வலைத்தளம் மூலம் மோசடி..ரூ.64 லட்சத்தை இழந்த பெண் – சைபர் க்ரைம் அதிரடி!
    Editor TN Talks

    Related Posts

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    April 4, 2026

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    Trending Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    April 4, 2026

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    April 4, 2026

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.