Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவை சட்டவிரோத குவாரிக்கு ரூ.32 கோடி அபராதம்: மோசடி அதிகாரிகள் மீது லஞ்சஒழிப்புத்துறை நடவடிக்கை!
    தமிழ்நாடு

    கோவை சட்டவிரோத குவாரிக்கு ரூ.32 கோடி அபராதம்: மோசடி அதிகாரிகள் மீது லஞ்சஒழிப்புத்துறை நடவடிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksJune 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sand1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிக்கு விதிக்கப்பட்ட 32 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரித்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    கோவை மாவட்டம், புரவிபாளையம் கிராமத்தில் பட்டா நிலங்களில் நடத்தி வரும் குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுத்ததாக கூறி செந்தாமரை என்பவருக்கு 32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரத்து 792 ரூபாய் அபராதம் விதித்து கோவை உதவி ஆட்சியர் 2022-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்த மேல் முறையீட்டை விசாரித்த புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர், உதவி ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, அபராதத் தொகையை 2 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 119 ரூபாயாகக் குறைத்து உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் உத்தரவை ரத்து செய்தும், 32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரத்து 792 ரூபாய் அபராதம் விதித்த உதவி ஆட்சியர் உத்தரவை உறுதி செய்தும் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து செந்தாமரை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, உரிமம் இல்லாமல் கற்களும், கிராவல் மண்ணும் எடுத்த குற்றத்துக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கும் வகையில் சட்டப்பிரிவுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில், செந்தாமரைக்கு எதிராக புகார் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனிம வளத்துக்கு இணையான தொகையை வசூலிப்பதில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்பதால், 100 சதவீத தொகையை அபராதமாக விதித்து கோவை உதவி ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, மொத்த அபராத தொகையையும் செந்தாமரையிடம் இருந்து வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.

    நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி, பேராசைக்காரர்களான குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

    சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர், அபராதத்தொகையை குறைத்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஆணையரின் உத்தரவை ரத்து செய்த இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது? என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் மூலம் விசாரணை நடத்தி, அவர்கள் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமித் ஷா வருகை – மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
    Next Article இயக்குநர் மணி கார்த்திக், பாடகர் மூக்குத்தி முருகன் ஏமாற்றி விட்டனர்..
    Editor TN Talks

    Related Posts

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.