தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதால் திட்டமிட்டப்படி நாளை பராசக்தி திரைப்படம் வெளியாகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி நடித்துள்ள 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. மொழி பிரச்சனை பேசும் பராசக்தி பொங்கலை ஒட்டி நாளை (டிச.10) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி நீடித்ததால் பராசக்தி ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில் பராசக்தில் படத்தில் கிட்டத்த 15க்கும் மேற்பட்ட இடங்களை கட் செய்ய தணிக்கை வாரியம் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. அதை படக்குழு ஏற்று கொண்ட நிலையில், இன்று பிற்பகல் பராசக்தி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் திட்டமிட்டப்படி நாளை பராசக்தி திரைக்கு வருகிறது. படத்தின் ரன் டைம் 2.43 நிமிடங்களாக உள்ளது.

ஜனநாயகன் வெளியீட்டில் இழுபறி நீடித்து வரும் சூழலில் பராசக்தி போட்டியின்று நாளை வெளியாகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version