தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.தற்போது காதலர்கள் தம்பதிகளாக மாறியுள்ளனர். இல்லறத்தில் இணைந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தானா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களுக்குத் திருமணமாகி ஒன்றரை மாதங்களே ஆன நிலையில், ராஷ்மிகா “நாங்கள் இப்போது மூன்று பேர்” என்ற தலைப்பில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். சமீபகாலமாக, கர்ப்பமாக இருக்கும்போது திருமணம் செய்துகொள்ளும் போக்கு மிகவும் பிரபலமாகி வரும் நிலையில், ராஷ்மிகாவின் இந்தப் பதிவு அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.
அண்மையில் ராஷ்மிகா பகிர்ந்த ஒரு கார்டூன் வீடியோவில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா உடன் ஒரு பூ ஒன்றும் கிராபிக் டிசைனில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த பதிவின் கீழ் “இப்போது நாங்கள் மூவர்” என்று ராஷ்மிகா குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து ராஷ்மிகா தாயாகப் போகிறாரா?, ராஷ்மிகா கர்ப்பமாக இருக்கிறாரா?, மூன்று என்றால் ஜூனியர் விரோஷ்?, நீங்கள் தாயாகப் போகிறீர்களா?, குடும்ப வாழ்க்கைக்கு வரவேற்கிறோம் என்று நெட்டிசன்கள் அந்தப் பதிவின் கீழ் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, ராஷ்மிகா இந்தப் பதிவில் ‘டெரிப்லி டைனி போஸ்ட்’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கைக் டேக் செய்துள்ளார். அதேபோல் ‘ராஷ்மிகா ரு’ என்கிற கணக்கையும் டேக் செய்துள்ளார். இதுவும் ராஷ்மிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் தான். இந்த பக்கத்தில் மெமரீஸை ஒரு நாட்குறிப்பு போல பராமரித்து வருகிறார். தனக்கு பயனுள்ளதாகத் தோன்றும் சிறிய விஷயங்களை இந்த கணக்கின் மூலமாக அவ்வப்போது ராஷ்மிகா பகிருவது வழக்கம்.
இந்த நிலையில் தான் ராஷ்மிகா இந்த பதிவை வெளியிட்டுள்ளார். அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் ராஷ்மிகாவின் இந்தப் பதிவு கர்ப்பத்தைப் பற்றியது அல்ல, இது ஒரு சாதாரண இன்ஸ்டாகிராம் பதிவு என்கிறார். மேலும், சமீபத்தில் தான் தேனிலவுக்கு சென்று வந்த விஜய் மற்றும் ராஷ்மிகா மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா இருவரும் தற்போது ‘ரனபலி’ ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளனர் என்பதால் அந்தப் பதிவு கர்ப்பத்தைப் பற்றியது அல்ல என்கின்றனர்.
