தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பண்ணை வீட்டில், அவரது இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன் நேரில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி சசிமோகன், “பொதுமக்கள் மற்றும் விஐபிக்கள் எவ்வித சிரமமுமின்றி அஞ்சலி செலுத்துவதற்காக தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதைக்கு போக்குவரத்து மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இரண்டு மாவட்ட எஸ்பிக்களின் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்கம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
