Close Menu
    What's Hot

    ஸ்டாலின் கண்டித்தார்; மீண்டும் கைது செய்துவிடாதீர்கள்!. அவையில் மார்க்கண்டேயன் கலகலப்பு!

    மெஸ்ஸி சர்ச்சை!. பிரேசில் கால்பந்து அணியை வரவேற்க தயாராகும் கொல்கத்தா?

    ஷேக் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்புக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!. ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»விஜய் – த்ரிஷா சர்ச்சை!. ”குந்தவையை வீட்டில் குந்த வைப்பது நல்லது”!. நடிகர் பார்த்திபன் சூசகம்!
    சினிமா

    விஜய் – த்ரிஷா சர்ச்சை!. ”குந்தவையை வீட்டில் குந்த வைப்பது நல்லது”!. நடிகர் பார்த்திபன் சூசகம்!

    Editor web3By Editor web3March 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trisha parthiban
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திரைையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் – த்ரிஷா விவகாரம் குறித்து, முன்னணி நட்சத்திரங்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

    நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த சில நாள்களுக்கு முன் திருமண நிகழ்வொன்றில் நடிகை த்ரிஷாவுடன் கலந்துகொண்டு பலருக்கும் அதிர்ச்சியளித்தார். காரணம், விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு அளித்ததைத் தொடர்ந்து விஜய் இப்படி செய்தது அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் டெக்ஸ்லா திரைப்படத்தின் நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்வில் இயக்குநர் பாலா உள்பட நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, சமுத்திரக்கனி நடிகர் விஜய்யின் செயலைக் குறிப்பிட்டு, ”இதெல்லாம் விளையாட்டா? யாரைப் பழிவாங்க இதைச் செய்கிறார்? ஒரு பிரச்னை நடக்கும்போது நடிகையைக் கூட்டி வருகிறார். நான்கு சுவருக்குள் இதையெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டும். சொந்தக் கட்சிக்காரர்களே இதற்கு மேல் முட்டுக்கொடுக்க முடியாது எனப் புலம்புகிறார்கள்” என விஜய்யின் செயலை விமர்சித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    ஏற்கனவே சமுத்திரக்கனி இதுகுறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இயக்குனரும் நடிகருமான பார்த்திபனும் இந்த விவகாரம் குறித்து மறைமுகமாக ஆனால் மிகவும் சூசகமாகப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் த்ரிஷாவின் புகைப்படத்தைப் பார்த்த பார்த்திபன், தனது பாணியில் நயமாகவும் அதேசமயம் எச்சரிக்கையுடனும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். த்ரிஷாவை ‘குந்தவை’ என்று குறிப்பிட்ட அவர், “இந்த குந்தவையை கொஞ்ச நேரம் குந்த வைப்பது நல்லது” என்று தெரிவித்தார். அதாவது, தற்போதைய சூழலில் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க அவரை அமைதியாக (குந்த வைக்க) இருக்கச் செய்வது அல்லது வீட்டிலேயே இருக்க வைப்பது நல்லது என்பதை அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

    மேலும், கவிதைகளை உதாரணமாகக் கொண்டு அவர் பேசுகையில், “சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதையைச் சொல்லாமல் இருப்பது (வெளிப்படுத்தாமல் இருப்பது) நல்லது” என்று குறிப்பிட்டார். இதன் மூலம் தனிப்பட்ட விவகாரங்களை பொதுவெளியில் பேசி பிரச்சனையாக்காமல் இருப்பதே திரைத்துறைக்கு நல்லது என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். பார்த்திபனின் இந்த “கவித்துவமான” விமர்சனம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபீகாரில் ஆட்சி மாற்றம்!. நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் அரசியல் வருகை!
    Next Article ஓபிஎஸ் வருகையால் சிக்கலில் திமுக தலைமை!. மூத்த நிர்வாகிகள் அதிருப்தி!
    Editor web3
    • Website

    Related Posts

    ஸ்டாலின் கண்டித்தார்; மீண்டும் கைது செய்துவிடாதீர்கள்!. அவையில் மார்க்கண்டேயன் கலகலப்பு!

    August 7, 2026

    சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தேனியில் பரபரப்பு.. வனத்துறைக்கு எதிராக ஆவேசம் காட்டிய மலைவாழ் மக்கள்!

    August 7, 2026

     முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மீண்டும் சிக்கல்!. கெடு விதித்த ஐகோர்ட்!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஸ்டாலின் கண்டித்தார்; மீண்டும் கைது செய்துவிடாதீர்கள்!. அவையில் மார்க்கண்டேயன் கலகலப்பு!

    மெஸ்ஸி சர்ச்சை!. பிரேசில் கால்பந்து அணியை வரவேற்க தயாராகும் கொல்கத்தா?

    ஷேக் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்புக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!. ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டம்!

    நாய்களை ஃபீல்டர்களாக மாற்றி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்!. நெகிழ்ச்சி வீடியோ!

    மெட்டாவுக்கு பேரிடி!. ரூ.4,800 கோடி அபராதம்; சிறுவர் மனநல வழக்கில் அதிரடி!. இந்தியாவில் தொடரும் விசாரணை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.