திருச்சி அருகே சிறுமியை மிரட்டி கட்டாய திருமணம் செய்த தவெக நிர்வாகியை போலீசார் போக்சோ வழக்கில்  கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் திருச்சி மாவட்ட,  தமிழக வெற்றிக் கழகத்தின் அந்தநல்லூர் ஒன்றிய இணை செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனது மனைவியின் உறவினரான 17வயது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்ய அழுத்தம் கொடுத்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ரகசியமாக கட்டாய திருமணம் செய்துள்ளார்.

இது குறித்து சிறுமி தரப்பில் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழாவில் இருந்த கார்த்திக்கை, கைது செய்தனர்.

பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version