தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தபால் வாக்குகளின் ஆரம்பகட்ட நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலுவான முன்னிலை பெற்றுள்ளார். இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், முதற்கட்டமாக எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் ஸ்டாலின்  பெரும்பான்மையான வாக்குகளைக் கைப்பற்றி தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறார்.

அதேவேளையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு திருச்சி கிழக்கு தொகுதியில் ஆரம்பம் சற்று பின்னடைவாகவே அமைந்துள்ளது. அங்கு எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் விஜய்  மற்ற வேட்பாளர்களை விடக் குறைவான வாக்குகளைப் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். பெரம்பூர் தொகுதியில் முன்னிலை வகிக்கும் அதே நேரத்தில், திருச்சியில் நிலவும் இந்த ஆரம்பகட்டப் பின்னடைவு தவெக தொண்டர்களிடையே கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version