Close Menu
    What's Hot

    அதிமுகவின் எதிர்காலத்தை விஜய் நிர்ணயிப்பதா?  ஆர்.பி. உதயகுமார் வேதனை- பொதுச் செயலாளராக எடப்பாடி தொடர தீர்மானம்

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
    Featured

    அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    Editor web1By Editor web1May 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    PTR
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கப் போவதாக திமுக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர், சட்டப்பேரவை உறுப்பினராகக் கடந்த 10 ஆண்டுகளாகத் தனது குழுவுடன் நேரம் பாராமல் உழைத்தது தனது கடமை எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு தனிப்பட்ட குடிமகனாகத் தனது நேரத்தை தானே தீர்மானிக்கும் சுதந்திரத்துடன் சில வாரங்கள் ஓய்வெடுக்க ஆவலுடன் காத்திருப்பதாகத் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக நேரமின்மை காரணமாகவும், அமைச்சராக இருந்த போது வெளிநாடுகளுக்குச் சென்று உரையாற்றப் பல சமயங்களில் அனுமதி மறுக்கப்பட்டதாலும் பல்வேறு வாய்ப்புகளைத் தம்மால் ஏற்க முடியாமல் போனதாக அவர் கூறியுள்ளார். தற்போது கிடைத்துள்ள இந்த ஓய்வுக் காலத்தில், அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்று உரையாற்ற உள்ளதாகத் அவர் தெரிவித்துள்ளார்.

    WhatsApp Image 2026 05 18 at 11.21.59 AM

    ஒரு பிரபல பதிப்பகத்துடன் இணைந்து புத்தகம் ஒன்றை வெளியிட ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அதன் பணிகள் திட்டமிட்ட காலத்தைவிட பின்தங்கியுள்ளதால், இந்த ஓய்வுக் காலத்தைப் புத்தகம் எழுதுவதற்காகப் பயன்படுத்திக்கொள்ளப் போவதாகவும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.

    அண்மையில் தமக்கு 60 வயது நிறைவடைந்தது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தனது உடல்நலத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், ஒரு சீரான கால அட்டவணை மற்றும் சிறந்த வாழ்க்கை முறையின் மீது கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.

    மதுரை மத்திய தொகுதி வாக்காளர்கள் மற்றும் தமக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ள பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அடுத்த தேர்தல் வரும் வரையிலாவது இனி மக்கள் பிரதிநிதியாக இருக்கப் போவதில்லை என்ற எதார்த்தத்தை உள்வாங்கிக் கொண்டு வருவதாகக் கூறியுள்ளார். பொதுச் சேவையில் தமக்குள்ள ஆர்வம் சிறிதும் குறையவில்லை என்றும், புத்துணர்ச்சியுடனும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடனும் மீண்டும் அரசியல் களத்திற்குத் திரும்புவேன் என்றும் தனது பதிவில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமருத்துவத்துறை தமிழகத்தின் நம்பர் 1 துறையாக வேண்டும் – அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்
    Next Article சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?
    Editor web1
    • Website

    Related Posts

    அதிமுகவின் எதிர்காலத்தை விஜய் நிர்ணயிப்பதா?  ஆர்.பி. உதயகுமார் வேதனை- பொதுச் செயலாளராக எடப்பாடி தொடர தீர்மானம்

    May 18, 2026

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    May 18, 2026

    சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவின் எதிர்காலத்தை விஜய் நிர்ணயிப்பதா?  ஆர்.பி. உதயகுமார் வேதனை- பொதுச் செயலாளராக எடப்பாடி தொடர தீர்மானம்

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?

    அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    மருத்துவத்துறை தமிழகத்தின் நம்பர் 1 துறையாக வேண்டும் – அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்

    Trending Posts

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    May 18, 2026

    பள்ளிகள் திறப்பு!. அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

    May 18, 2026

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    மின் கட்டணம் செலுத்த புதிய வசதி!. வங்கி கணக்கில் இருந்து தானாகவே ‘ஆட்டோ பே’ முறை அறிமுகம்!

    May 18, 2026

    கேரளத்தின் புதிய முதலமைச்சாராக பதவியேற்றார் வி.டி. சதீசன்!. காங். தலைவர்கள் பங்கேற்பு!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.