Close Menu
    What's Hot

    தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையர் நியமனத்துக்கான தேடல்குழு – அரசு அறிவிப்பு

    சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை.. விஜயிடம் அன்புமணி வலியுறுத்தல்..!!

    நேட்டோ உச்சி மாநாட்டில் தலைவர்களுக்கு ரிவால்வர்;  துருக்கி அதிபர் எர்டோகன் பரிசால்  சர்ச்சை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அண்ணா பல்கலை.மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை
    Featured

    அண்ணா பல்கலை.மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை

    Editor TN TalksBy Editor TN TalksJune 2, 2025Updated:June 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Untitled 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அபராத தொகை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுபற்றி அவர் அளித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் மகளிர் போலீசார், ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இதுபற்றி தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது. அவர்கள் ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரித்து கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் தொடர்புடைய ஞானசேகரன், குற்றவாளி தான் என்று கடந்த வாரம் நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார். அதன் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன.

    அதன் விரிவான விவரங்கள் பின்வருமாறு..

    பி.என்.எஸ் சட்டப்பிரிவு

    329 – விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல் – 3 ஆண்டுகள்

    126(2) – சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் – 1 மாதம்

    87 – வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் – 10ஆண்டுகள், 10ஆயிரம் அபராதம்

    127(2) – உடலில் காயத்தை ஏற்படுத்துதல் – 1 ஆண்டுகள்

    75(2) – விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல் – 3 ஆண்டுகள்

    76 – கடுமையாக தாக்குதல் – 7 ஆண்டுகள், 10ஆயிரம் ரூபாய் அபராதம்

    64(I) பாலியல் வன்கொடுமை – 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் – 25,000 அபராதம்

    351(3) கொலை மிரட்டல் விடுத்தல் -7ஆண்டுகள், 10ஆயிரம் அபராதம்

    238(B) பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல் – 3ஆண்டுகள், 10ஆயிரம் அபராதம்

    தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000
    66(E) தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் – 3 ஆண்டுகள், 25ஆயிரம் அபராதம்

    தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் 2002 பிரிவு 4 – தண்டனை இல்லை

    மொத்தமாக 90,000 அபராதம்,, அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்
    Next Article ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப்…
    Editor TN Talks

    Related Posts

    தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையர் நியமனத்துக்கான தேடல்குழு – அரசு அறிவிப்பு

    July 11, 2026

    சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை.. விஜயிடம் அன்புமணி வலியுறுத்தல்..!!

    July 11, 2026

    நேட்டோ உச்சி மாநாட்டில் தலைவர்களுக்கு ரிவால்வர்;  துருக்கி அதிபர் எர்டோகன் பரிசால்  சர்ச்சை

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையர் நியமனத்துக்கான தேடல்குழு – அரசு அறிவிப்பு

    சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை.. விஜயிடம் அன்புமணி வலியுறுத்தல்..!!

    நேட்டோ உச்சி மாநாட்டில் தலைவர்களுக்கு ரிவால்வர்;  துருக்கி அதிபர் எர்டோகன் பரிசால்  சர்ச்சை

    ரூ.100 கோடிப்பே..!! பழனி கோயிலுக்கு சொந்தமான நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு..!!

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல்: இயக்குநர் சேரன் போட்டி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.