Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நானும், முதல்வர் விஜய்யும் ஒரே கல்லூரி தான்; ஆனா இங்க திமுக தான் சீனியர்!. உதயநிதி பேச்சு!
    Featured

    நானும், முதல்வர் விஜய்யும் ஒரே கல்லூரி தான்; ஆனா இங்க திமுக தான் சீனியர்!. உதயநிதி பேச்சு!

    Editor web3By Editor web3May 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    DMK senior udhay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை வாழ்த்தி அனைத்து கட்சிகளின் சார்பில் உள்ள உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். அந்தவகையில், புதிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை வாழ்த்திப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது உரையைத் தொடங்கும் முன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

    தனது உரையில் ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்த உதயநிதி, “சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், முதல்வர் விஜய் மற்றும் நான் என மூவருமே ஒரே கல்லூரியில்   பயின்றவர்கள்” என்று குறிப்பிட்டார். இந்தத் தகவல் அவையில் ஒரு கலகலப்பான சூழலை உருவாக்கியது. “நாங்கள் அனைவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்களாக இருக்கலாம், ஆனால் இந்தப் பேரவையைப் பொறுத்தவரை நான் சார்ந்திருக்கும் திமுக தான் மிகவும் சீனியர்” என்று அவர் குறிப்பிட்டார்.

    மேலும் பேசிய அவர், “அரசியல் அனுபவமும், அறிவும் அதிகம் கொண்டவர்கள் திமுகவினர். மாநிலத்தின் நலனே மிக முக்கியம் என்பதால், எங்களது நீண்டகால அரசியல் அனுபவங்களை அவையில் பகிர்ந்து கொள்ள சபாநாயகர் போதிய வாய்ப்பளிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். ஆளுங்கட்சிக்குச் சவால் விடும் வகையிலும், அதே சமயம் ஆக்கபூர்வமான விவாதங்களுக்குத் தயார் என்ற ரீதியிலும் அமைந்த உதயநிதியின் இந்தப் பேச்சு சட்டமன்றத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    தொடர்ந்து, சட்டப்பேரவையில் அனைவருக்கு சமமான வாய்ப்பளிக்கும் அன்னையாக சபாநாயகர் JCD பிரபாகர் செயல்பட வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தினார். ஆளுங்கட்சி, மட்டுமின்றி, பேரவையின் முழு நிகழ்வையும் ஒளிபரப்ப வேண்டும் என்றார். எதிர்க்கட்சிகள், எதிரிக்கட்சிகள் அல்ல என்பதை எடுத்துக்காட்டும் வகையில், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சென்று சந்தித்த CM அன்பு தம்பி விஜய்க்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார்.

    சட்டப்பேரவையில் பேசுவதற்கு வாய்ப்பளித்த ராமதாஸுக்கு நன்றி தெரிவிப்பதாக செளமியா அன்புமணி கூறியது கவனம் பெற்றுள்ளது. சபாநாயகர் பழுத்த சமூகநீதி பின்னணியில் வளர்ந்தவர் என்பதால் ஜனநாயக முறைப்படி இந்த பேரவை நடக்கும் என்பதில் தங்களுக்கு எந்த ஐயமுமில்லை என்றார். வரலாற்று சிறப்புமிக்க இந்த அவையில் பணியாற்றுவதை மிகுந்த பெருமையாகவும், பாக்கியமாகவும், வரமாகவும் கருதுகிறோம் எனவும் தெரிவித்தார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தவெக MLA-வுக்கு தடை!. சென்னை ஐகோர்ட்!
    Next Article பேரவையில் பரபரப்பு!. சபாநாயகருடன் சிவி சண்முகம், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.