நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் சிறப்பு அமர்வில், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் மீதான விவாதம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த முக்கிய விவகாரங்கள் குறித்து உரையாற்றுகிறார். ஏற்கனவே இந்த மசோதாக்களை “அதிகாரப் பறிப்பு” மற்றும் “தேசவிரோத நடவடிக்கை” என்று விமர்சித்துள்ள அவர், இன்று அவையில் தனது வாதங்களை முன்வைக்க உள்ளார்.

மகளிர் இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் முழுமையாக ஆதரித்தாலும், அதைத் தொகுதி மறுவரையறையுடன் இணைப்பதற்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். குறிப்பாக, ஓபிசி (OBC) பிரிவினருக்கான உள் ஒதுக்கீடு இல்லாமல் இந்த மசோதா முழுமையடையாது என்றும், 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதி வாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். தென்னிந்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளதாக அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு, இன்றைய விவாதத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version