Close Menu
    What's Hot

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    பெரம்பூரில் இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை: தவெக விளக்கம்!

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நீதிமன்றங்களில் காவல்துறையினர் எப்படி ஆஜராகவேண்டும்? – சுற்றறிக்கை பிறப்பிக்க உத்தரவு
    Featured

    நீதிமன்றங்களில் காவல்துறையினர் எப்படி ஆஜராகவேண்டும்? – சுற்றறிக்கை பிறப்பிக்க உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017hc
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீதிமன்றங்களில் சாட்சியம் அளிக்க ஆஜராகும் போது முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் எனவும் இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினருக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    குற்ற வழக்கில் சாட்சியம் அளிக்க, கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருக்கோயிலூர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகம் என்பவர், மதுபோதையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுகுறித்து துறைரீதியாக விசாரணைக்கு பிறகு அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்த மேல் முறையீட்டில், கட்டாய ஓய்வு உத்தரவை, மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து, தண்டனைய குறைத்து உத்தரவிட்டார்.

    கடந்த 2016 ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து நான்கு ஆண்டுகளுக்கு பின் 2020 ஆம் ஆண்டு ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளாமல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டி.ஜி.பி. – விழுப்புரம் டி.ஐ.ஜி மற்றும் எஸ்.பி, தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் என்.செந்தில்குமார், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறுமுகம் மதுபோதையில் இருந்துள்ளார் என்பதற்கு பரிசோதித்த மருத்துவ அதிகாரி அளித்த சான்றே போதுமானது. காவல் உதவி ஆய்வாளர் மதுபோதையில் நீதிமன்றத்துக்கு சாட்சியளிக்க வந்த செய்கையை சகித்துக் கொள்ள முடியாது எனக் கூறி, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    நீதிமன்றங்களுக்கு சாட்சியளிக்க வரும் காவல் துறையினர் முறையான சீருடை அணிந்து வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், காவல் துறையினர் நீதிமன்றங்களுக்கு சாட்சியளிக்க செல்லும் போது முறையான சீருடை அணிந்து, பணி அர்ப்பணிப்புடன் செல்ல வேண்டும்; இல்லாவிட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து போலீசாருக்கும் அறிவுறுத்தி, நான்கு வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளனர்.

    Court Order Indian Courts Judiciary Law and Justice Legal Procedures Police Department
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு
    Next Article DC வீரர் அபிஷேக் போரலை உடனே கைது செய்க..!! கொல்கத்தா ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!
    Editor TN Talks

    Related Posts

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    July 21, 2026

    பெரம்பூரில் இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை: தவெக விளக்கம்!

    July 21, 2026

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    பெரம்பூரில் இணையதளத்தில் பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை: தவெக விளக்கம்!

    தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    “விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.