அதிமுக விழுப்புரம் மாவட்டம் சி.வி சண்முகம் ஆதரவாளர்கள் தங்கள் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்வதற்காக சென்னை அதிமுக தலைமையகம் நோக்கி புறப்பட்டனர்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்  சி .வி சண்முகம் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களித்ததால் அவரது மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவருக்குப் பதிலாக மாவட்ட செயலாளர் பதவிக்கு விழுப்புரத்தைச் சேர்ந்த பசுபதியை நியமனம் செய்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த அதிமுக ஒன்றிய செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டத்திற்கு பசுபதி வருகை தந்தார்.

கூட்டத்திற்கு சி.வி சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியது.

இதில் பசுபதியின் கார் மீது சிவி சண்முகம் ஆதரவாளர்கள் கற்களை வீசி எறிந்தனர். இந்த நிலையில் சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட 11 பேரை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி அவர்களை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

அதேபோல நேற்றைய தினமும் சுமார் 30க்கும் மேற்பட்டவர்களின் கட்சிப் பதவியையும் நீக்கி உள்ளார்

இந்த நிலையில் இன்று சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் திண்டிவனம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் உட்பட  1000த்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களது பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்ய சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு திண்டிவனத்தில் இருந்து ஒன்றாக சென்னை நோக்கி  புறப்பட்டு சென்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version