Close Menu
    What's Hot

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!
    Featured

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    Editor web3By Editor web3July 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Madras High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று இந்தியாவுக்கு மாற்றப்பட்ட நபர் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்காத மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

    சென்னையைச் சேர்ந்த ஜாகீர் உசேன், கடந்த 2015-ம் ஆண்டு இலங்கையில் 720 கிராம் ஹெராயின் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டார். அந்த நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர், இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், 2016-ம் ஆண்டு ஜாகீர் உசேன் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவரை 2022-ம் ஆண்டு வரை சிறையில் வைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் தனது தந்தை விடுவிக்கப்படாததைக் கண்டித்து, ஜாகீர் உசேனின் மகன் சமீர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் இந்தியாவில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்க முடியும் என்ற சூழலில், மத்திய உள்துறை அமைச்சகம் ஏன் இவ்வளவு நீண்ட காலத்திற்கு அவரைச் சிறையில் வைக்க உத்தரவிட்டது என்பது குறித்து விளக்கம் கேட்டிருந்தது. மேலும், ஜாகீர் உசேனை இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு மாற்றும் போது நடந்த இரு நாட்டு அரசு அதிகாரிகளுடனான கடிதப் போக்குவரத்து தொடர்பான விவரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது.

    நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல், சம்பந்தப்பட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் தொடர்ந்து தாமதம் செய்தன. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை இணைச் செயலாளர்களுக்கு தலா ரூ. 50,000 என மொத்தம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர். இந்தத் தொகையை நான்கு வார காலத்திற்குள் உயர்நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    Central Government Chennai High Court Drug Trafficking Fine Imposed Provide Details Srilanka Zakir Hussain
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.
    Next Article விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    July 3, 2026

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.