Close Menu
    What's Hot

    ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

    முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

    மீண்டும் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!. அடுத்தடுத்து நடக்கும் 3-வது அதிர்ச்சிச் சம்பவம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»“என் இனிய தமிழ் மக்களே”.. இந்த குரல் சினிமா உள்ள வரை இருக்கும்..!! உணர்ச்சிவசப்பட்ட ஆர்.பி உதயகுமார்..!!
    Featured

    “என் இனிய தமிழ் மக்களே”.. இந்த குரல் சினிமா உள்ள வரை இருக்கும்..!! உணர்ச்சிவசப்பட்ட ஆர்.பி உதயகுமார்..!!

    editor5By editor5June 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 06 11 at 2.45.13 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ள வரை நிலைத்திருக்கும் என பாரதிராஜாவுக்கு புகழாரம் சூட்டினார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட் ரோடு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் இயக்குநர் பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அதிமுக சார்பில் பெரும் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    அஞ்சலி செலுத்திய பின்னர் பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த ஆர்.பி. உதயகுமார், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “கிராமத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி, கலைத்துறையில் புதிய நுழைவாயிலை திறந்து வைத்தவர் பாரதிராஜா. அவரது இழப்பு தமிழ் திரையுலகத்திற்கு மட்டுமல்ல, எல்லா தரப்பு மக்களின் நெஞ்சிலும் பேரிடியாக விழுந்துள்ளது. அவரது படைப்புகள் எப்போதும் நிலைத்திருக்கும்” என்று வருத்தம் தெரிவித்தார்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் உத்தரவின் பேரில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் இந்த அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் உதயகுமார் குறிப்பிட்டார். “கலைத்துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்த பாரதிராஜாவுக்கு இறப்பு என்று இல்லை. அவரது பூத உடலுக்கு மட்டுமே இறப்பு. ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற அவரது இனிய குரல் தமிழ் சினிமா உள்ளவரை என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.

    பாரதிராஜா தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவர். கிராமிய வாழ்க்கை, விவசாயிகளின் போராட்டங்கள், இளைஞர்களின் கனவுகள், பெண்களின் வலிமை ஆகியவற்றை தன் படங்களின் மூலம் அழகாக வெளிப்படுத்தியவர். ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ உள்ளிட்ட பல காலத்துக்கால படைப்புகளை வழங்கிய அவர், பல புதுமுகங்களை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்ததன் மூலம் தன் பங்களிப்பை நிலைநாட்டினார். அதிமுக சார்பிலும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பிலும் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும், அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததாகவும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் தேனி மாவட்ட அதிமுக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவின் மரபை பாதுகாத்து, புதிய பரிமாணத்தை அளித்த பாரதிராஜாவின் நினைவுகள் என்றும் தமிழ் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது மரணம் திரையுலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், திரைத்துறை பிரமுகர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் ராஜ்குமார் தகவல்
    Next Article “குழந்தை தொழிலாளர் இல்லா தமிழ்நாடு” இலக்கை நோக்கி செயல்படுவோம் – முதல்வர் விஜய்..!!
    editor5

    Related Posts

    ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

    June 11, 2026

    முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

    June 11, 2026

    மீண்டும் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!. அடுத்தடுத்து நடக்கும் 3-வது அதிர்ச்சிச் சம்பவம்!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

    முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

    மீண்டும் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!. அடுத்தடுத்து நடக்கும் 3-வது அதிர்ச்சிச் சம்பவம்!

    ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ‘தனிச் சிறப்புச் சட்டம்’ – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்

    ஒரே இரத்தம்… இருவேறு தேசம்!. உலகக்கோப்பையில் நேருக்கு நேர் மோதும் 7 ஜோடி சகோதரர்கள்!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.