Close Menu
    What's Hot

    4 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தது ஏன்? 7 நாளில் விளக்கமளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    ‘நான் முதல்வன் திட்டம்’ பற்றி யோசித்து முடிவு செய்யப்படும்..!! அமைச்சர் முகமது பர்வேஸ் தகவல்..!!

    மூன்று துறைகள் இணைந்து நில ஆவணங்கள் கணினிமயமாக்கம்: அமைச்சர்கள் ஆலோசனை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»“முதல்ல பாகிஸ்தானுக்கு ஆயுதம் விக்கிறத நிறுத்துங்க!”. ஐரோப்பாவை அலறவிட்ட ஜெய்சங்கர்!
    Featured

    “முதல்ல பாகிஸ்தானுக்கு ஆயுதம் விக்கிறத நிறுத்துங்க!”. ஐரோப்பாவை அலறவிட்ட ஜெய்சங்கர்!

    Editor web3By Editor web3June 12, 2026Updated:June 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை விமர்சிக்கும் மேற்கத்திய நாடுகளின் இரட்டை நிலையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக சாடியுள்ளார்.

    பின்லாந்தில் நடைபெற்ற ‘குல்தரந்தா பேச்சுவார்த்தை’ என்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கும், தேசிய நலன்களுக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், “இந்திய ஆயுதங்களைக் கொண்டு இதுவரை எந்த ஒரு ஐரோப்பிய நாடும் தாக்கப்படவில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை என்னால் அப்படிச் சொல்ல முடியாது. ஐரோப்பா நாடுகள், விற்கும் ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக, குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளால் (பாகிஸ்தான்) பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியர்களாகிய நாங்கள் ஒருபோதும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்று குறிப்பிட்டார்.

    மேலும், உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியாவின் பாரம்பரிய விநியோகஸ்தர்களான மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் எண்ணெய் வாங்கத் தொடங்கின. இதனால் சந்தையில் ஏற்பட்ட விலை மற்றும் தட்டுப்பாடு காரணமாக, இந்தியா தனது தேவையை பூர்த்தி செய்ய ரஷ்ய எண்ணெயை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

    உலகப் பொருளாதாரச் சந்தையை சமநிலையில் வைத்திருக்க ரஷ்ய எண்ணெயை வாங்குமாறு தொடக்கத்தில் இந்தியாவை அமெரிக்காதான் ஊக்குவித்தது. ஆனால், பின்னர் அதற்கு வரி விதித்து, தற்போது மீண்டும் தடைகளை நீக்கியுள்ளது. இதில் எந்த ஒரு பெரிய கொள்கையோ அல்லது தார்மீக நெறியோ இல்லை என்பதால், மேற்கத்திய நாடுகள் இதில் புனிதர்களைப் போல நாடகமாடத் தேவையில்லை.

    எந்தவொரு போராக இருந்தாலும், அது உக்ரைன் போராகவோ அல்லது ஈரான் மோதலாகவோ இருந்தாலும், அதன் பாதிப்பு உலகளவில் எதிரொலிக்கிறது. எனவே, அனைத்து மோதல்களுக்கும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

    'Europe's weapons attack us Jaishankar questions Russian oil criticism
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleRSS தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு..!! பெரும் பரபரப்பு..!!
    Next Article மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு கிடைக்கும் கௌரவம்..!! தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு பெயர் சூட்டும் வரலாற்று முடிவு..!!
    Editor web3
    • Website

    Related Posts

    4 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தது ஏன்? 7 நாளில் விளக்கமளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    June 12, 2026

    ‘நான் முதல்வன் திட்டம்’ பற்றி யோசித்து முடிவு செய்யப்படும்..!! அமைச்சர் முகமது பர்வேஸ் தகவல்..!!

    June 12, 2026

    மூன்று துறைகள் இணைந்து நில ஆவணங்கள் கணினிமயமாக்கம்: அமைச்சர்கள் ஆலோசனை..!!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    4 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தது ஏன்? 7 நாளில் விளக்கமளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    ‘நான் முதல்வன் திட்டம்’ பற்றி யோசித்து முடிவு செய்யப்படும்..!! அமைச்சர் முகமது பர்வேஸ் தகவல்..!!

    மூன்று துறைகள் இணைந்து நில ஆவணங்கள் கணினிமயமாக்கம்: அமைச்சர்கள் ஆலோசனை..!!

    கரூர் விவகாரம்!. தவெக ஆட்சி அமைந்த பின் வேகம் எடுக்கும் சிபிஐ விசாரணை!. போலீசார் ஆஜர்!

    மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு கிடைக்கும் கௌரவம்..!! தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு பெயர் சூட்டும் வரலாற்று முடிவு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.