முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வராத நிலையில் அமைச்சர்களும் ஜனநாயகன் திரைப்படம் பார்க்க சென்றுவிட்டதால் ஒட்டுமொத்த தலைமைச் செயலகமும் வெறிச்சோடி காணப்பட்டது.
தவெக ஆட்சியமைந்த பின் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் திங்கள் முதல் வெள்ளி வரை தலைமைச் செயலகம் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
காலை 10 மணிக்கு முன்பாகவே தலைமைச் செயலகம் வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் மாலை 5 மணி வரை அலுவல் பணிகளை மேற்கொள்வதால் அமைச்சர்களும் தலைமைச் செயலகத்திற்கு தவறாமல் வருகைபுரிந்து அவரவர் துறை சார்ந்த அலுவல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவான இறுதி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் நேற்றே திரைப்படத்தை பார்த்துவிட்ட நிலையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் சொந்த மாவட்டங்களில் உற்சாகத்துடன் இன்று வெளியாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுகளித்து வருகின்றனர்.
முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் வராத காரணத்தினால் வார இறுதி நாட்கள்போல் தலைமைச் செயலகம் காட்சியளிக்கிறது.
முதலமைச்சர் தினமும் மாலை நேரத்தில் தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்படுவதை பார்க்க கூடும் கட்சியினரின் கூட்டமும் இன்று வராத காரணத்தினால் ஒட்டுமொத்த தலைமைச் செயலகமும் வெறிச்சோடி காணப்பட்டது.
