Close Menu
    What's Hot

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    இந்தியா எப்போது கடைசியாக பிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்றது?. ஏன் தகுதிப்பெறவில்லை?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»இனி ஒருநாளைக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் கிடையாது!. மத்திய அரசு அதிரடி!
    Featured

    இனி ஒருநாளைக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் கிடையாது!. மத்திய அரசு அதிரடி!

    Editor web3By Editor web3June 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    petrol
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக, நாட்டில் உள்ளூர் அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, சில்லறை எரிபொருள் நிலையங்களில் ஒரு வாகனத்திற்கு அல்லது ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 200 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்படும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    டீசல் மற்றும் பெட்ரோலை நேரடியாக வாகனங்களின் எரிபொருள் தொட்டிகளிலோ அல்லது பிஇஎஸ்ஓ (PESO) அங்கீகாரம் பெற்ற கொள்கலன்களிலோ மட்டுமே நிரப்ப வேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற மொத்தமாக எரிபொருள் வாங்கும் நுகர்வோர், இனி சில்லறை பெட்ரோல் பங்குகளில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கு என அங்கீகரிக்கப்பட்ட பிரத்யேக நுகர்வோர் பங்குகள் மூலமாகவே எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    அதாவது, சில்லறை விற்பனை விலைக்கும், மொத்த விற்பனை விலைக்கும் இடையே உள்ள விலை வித்தியாசம் காரணமாக, மொத்த நுகர்வோர்கள் சில்லறை பங்குகளில் அதிகளவில் எரிபொருள் வாங்கியதால் பல பகுதிகளில் அசாதாரணத் தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் சாதாரண பொதுமக்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ‘Temporary Regulation of Supply Order, 2026’ என்ற இந்தத் தற்காலிக உத்தரவு 90 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். தேவைப்படின் இது மேலும் நீட்டிக்கப்படலாம். மேலும், கள்ளச்சந்தை விற்பனை மற்றும் பதுக்கல் போன்ற முறைகேடுகளைத் தடுக்க கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    200 Litres Diesel Sales Govt order Per Vehicle Daily Petrol Pumps Restricts
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெங்காயம் கொள்முதல் விலை இன்று முதல் உயர்வு!. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
    Next Article ஹர்ஷவர்தனின் ‘#IOIO’ ஹூக் ஸ்டெப்!. இன்ஸ்டாகிராமில் புதிய ட்ரெண்ட்!
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியா எப்போது கடைசியாக பிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்றது?. ஏன் தகுதிப்பெறவில்லை?

    June 13, 2026

    நடிகையின் காலில் விழுந்த மிஷ்கின்; காரணம் என்ன?

    June 13, 2026

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குற்றாலம் போறீங்களா..?? உஷார்..!! சாலையில் ஹாயாக உலா வரும் கரடிகள்..!! அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்..!!

    ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? – அன்புமணி எதிர்ப்பு

    இந்தியா எப்போது கடைசியாக பிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்றது?. ஏன் தகுதிப்பெறவில்லை?

    நடிகையின் காலில் விழுந்த மிஷ்கின்; காரணம் என்ன?

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.